ஐக்கிய அமீரகத்தில் தமிழர்களுக்கான குறுநாடக விழா.. படைப்புகளை அனுப்ப டிசம்பர் 5 கடைசி நாள்!
துபாய் : ஐக்கிய அமீரகத்தில் வாழும் தமிழர்களுக்காக குறு நாடக விழா நடத்தப்படுகிறது. இதற்காக தமிழர்கள் தங்கள் படைப்புகளை டிசம்பர் 5ஆம் தேதி அனுப்பி வைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
கடல் கடந்து வாழும் போதும் கலை வளர்ப்பதிலும் அதை வெளிப்படுத்துவதிலும் மனிதனுக்கு எப்போதும் மட்டற்ற மகிழ்ச்சிதான். ஐக்கிய அரபு நாட்டில் வாழும் தமிழர்களின் எழுத்து இயக்கம் நடிப்பு திறனுக்கு ஒரு நல்வாய்ப்பாக அமைகிறது 'குறுநாடக குழு'.

அமீரக குறு நாடக விழா'அமைப்பாளர்களும், அவர்களுடன் இணைந்து ஆர்வத்துடன் கடந்த ஐந்து வருடங்களாக பங்கு பெறும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடக கலைஞர்களும், மேடை நாடகங்கள் மற்றும் குறும்படங்களை சிறப்பாக நடத்தி வருகின்றனர்.
2016 முதல் வருடம் தோறும் மேடை நாடக வடிவில் அமீரகத்தில் நடந்து வந்த இவ்விழா கடந்த வருடம் போன்றே இவ்வருடமும் தற்கால சூழலுக்கு உட்பட்டு, 'குறும்பட விழா' வாக நடைபெறப்போகிறது. குறும்படங்களுக்கு கதை எழுத, இயக்க, நடிக்க, ஆர்வமுள்ள அனைவரும் இதில் பங்கு பெற முன் வர வேண்டும்.
இத்தகைய திறமைகள் பொருந்திய பல அமீரக தமிழ் ஆர்வலர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என்றும் அமைப்பாளர்கள் அன்புடன் அழைப்பு விடுகின்றனர். புதுமையும் சுவாரசியமும் நிறைந்த கதை களங்கள், நடிப்பு திறன், இசை, காட்சி வடிவமைப்பு, அனுபவம் வாய்ந்த பிரபல தமிழ் நாடக நடிகர்கள் தொழில் நுட்ப கலைஞர்களின் தலைமை மற்றும் மதிப்பீடு, பெரும் நிறுவனங்களின் உறுதுணை இவை அனைத்தும் இவர்களது விழாவின் வெற்றிக்கான சிறப்பம்சங்களாகும்.

நாடக கலைஞர்கள் பத்திற்கும் மேற்பட்ட வகையில் எழுத்து, இயக்கம், நடிப்பு, இசை, எடிட்டிங், திரை கதை வடிவம், ஒளிப்பதிவு, இவற்றில் பரிசுகள் பெற ஊக்குவிக்கப்படுவர். பங்கு பெறும் அனைத்து கலைஞர்களுக்கும் சான்றிதழும் வெற்றியாளர்களுக்கு சிறப்பு பரிசும் தரப்படும். மேலும் தகவல்களுக்கு பங்கேற்பாளர்கள் அமீரக குறு நாடக குழுவினரின் முக நூல் பக்கமான https://www.facebook.com/UAEKurunatagam/ நுழைந்தால் தெரிந்து கொள்ளலாம் என்றும், 2021 டிசம்பர் 5ம் தேதிக்குள் தங்களின் புத்தம் புதிய படைப்புகளை அனுப்பி வைக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.












Click it and Unblock the Notifications