அதிர்ஷ்டம் எப்படி அடிக்குது பாருங்க.. டக்குன்னு வந்த ஜடியா! லாட்டரியில் 33 கோடி அள்ளிய கேரள வாலிபர்
துபாய்: ஐக்கிய அரபு அமீரக்தின் அல் அய்ன் நகரில் கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றி வரும் கேரளாவை சேர்ந்த இளைஞருக்கு லாட்டரியில் ரூ.33 கோடி பரிசு கிடைத்துள்ளது. தனது குழந்தைகளின் பிறந்த நாள் எண்ணில் வாங்கிய லாட்டரிக்கு பரிசு அடித்து இருப்பது அவருக்கு இரட்டை சந்தோஷத்தை கொடுத்துள்ளதாம்.
தமிழகத்தில் லாட்டரி விற்பனைக்கு அனுமதி இல்லை. எனினும் நமது அண்டை மாநிலமான கேரளாவில் லாட்டரி விற்பனைக்கு அனுமதி உள்ளது. தினமும் லாட்டரி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தினந்தோறும் ஒரு பரிசும் வாரந்தோறும் ஒரு பரிசும் இதேபோல் விழா நாட்களில் பம்பர் பரிசும் என கேரளாவில் லாட்டரி விற்பனை படு ஜோராக நடந்து வருகிறது.

இதில், கேரளாவில் லாட்டரியில் அவ்வப்போது தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு பரிசுத்தொகை விழுந்து திடீர் பணக்காரர்கள் ஆகி வருகின்றனர். அண்மையில் கேரளாவில் சபரி மலை கோவிலுக்கு சென்ற பாண்டிச்சேரியை சேர்ந்த நபருக்கு கிறிஸ்துமஸ் நியூ இயர் பம்பர் ரூ.25 கோடி பம்பர் பரிசு அடித்தது. சபரிமலைக்கு மாலை அணிவித்து சென்ற போது எதார்த்தமாக வாங்கிய லாட்டரி சீட்டின் மூலம் தற்போது அந்த நபர் கோடிகளுக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார்.
கோடிகளுக்கு சொந்தக்காரர்: இப்படி, ஒரே நாளில் அதிர்ஷ்டம் கைகொடுத்து வாழ்க்கையில் செட்டில் ஆக வைத்து விடுகிறது. கேரளாவில் லாட்டரி சீட்டு வாங்கி தமிழர்கள் பயனடைவது போல், ஐக்கிய அரபு அமீரகத்தில் லாட்டரி வாங்கி இந்தியர்களும் பயனடைந்து வருகின்றனர். அந்த வகையில் தான் ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலைக்காக சென்ற கேரளாவை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு "திண்ணைல் கிடந்தவனுக்கு திடுக்குனு அடித்ததாம் யோகம்" என்பது போல, அவர் வாங்கிய லாட்டரியில் ரூ.33 கோடி பரிசு கிடைத்துள்ளது. இது குறித்த விவரத்தை இங்கே பார்க்கலாம்.
கேரள மாநிலத்தை சேர்ந்தவர் ராஜீவ் அரிக்கத். இவர் ஐக்கிய அரபு அமீரகத்தின் அல் அய்ன் நகரில் கட்டுமான நிறுவனம் ஒன்றில் பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் ராஜீவ் அரிக்கத் அங்கு நடைபெறும் லாட்டரி குலுக்கலில் அடிக்கடி கலந்து கொண்டு வந்தார். அப்படித்தான் கடந்த வாரத்தில் லாட்டரி ஒன்றை வாங்கியுள்ளார். அப்போடு அவர் தனது 5 மற்றும் 8 வயது குழந்தைகளின் பிறந்த நாள் எண்ணில் இந்த லாட்டரியை வாங்கியிருக்கிறார்.
இரட்டிப்பு மகிழ்ச்சி: இந்த நிலையில், அந்த லாட்டரி குலுக்கல் இன்று நடந்துள்ளது. இதில் ராஜீவ் அரிக்கத்திற்கு 15 மில்லியன் திர்ஹாம் பரிசாக கிடைத்துள்ளது. அதாவது இந்திய மதிப்பில் 33 கோடி ரூபாய் ஆகும். ஒரே நாளில் 33 கோடி ரூபாய்க்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார். அதிர்ஷ்ட மழையால் கோடிஸ்வரன் ஆகியுள்ள கேரள இளைஞர் தனக்கு எப்படி பரிசு கிடைத்தது பற்றி கூறியதாவது:-
எனக்கு கிடைத்துள்ள இந்த பரிசுத்தொகையினை நான் என்ன செய்யப்போகிறேன் என்று தெரியவில்லை. என்ன செய்வது என்றும் இதுவரை முடிவு செய்யவில்லை. எனினும் எனக்கு எப்போது துணையிருந்த எனது உற்ற நண்பர்கள் 19 பேருக்கு இந்த பணத்தின் ஒரு பகுதியை பகிர்ந்து கொடுக்க விரும்புகிறேன். குறிப்பாக எனது குழந்தைகளின் பிறந்த நாள் தேதியில் வாங்கிய லாட்டரிக்கு பரிசு கிடைத்திருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications