சீரியஸா இருங்க.. ஐபிஎல் மட்டும் போதும்னு நினைச்சா இப்படித்தான்.. இந்திய வீரர்களை விளாசிய அக்ரம்!
துபாய்: டி 20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி வீரர்களின் மோசமான ஆட்டம் குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் விமர்சனம் வைத்துள்ளார்.
2021 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி மிக மோசமாக ஆடி சொதப்பி உள்ளது. பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக அடுத்தடுத்து இந்தியா தோல்வி அடைந்துள்ளது.
இந்திய அணியின் தோல்விக்கு ஐபிஎல் ஆட்டம் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. ஐபிஎல் போட்டிகளால் இந்திய வீரர்களுக்கு போதுமான ஓய்வு கிடைக்கவில்லை. இதுதான் சர்வதேச மேடையில் இந்தியா சரிய காரணம் என்று விமர்சனம் வைக்கப்பட்டுள்ளது.

வாசிம் அக்ரம்
இந்த நிலையில் இந்திய வீரர்கள் மீது வாசிம் அக்ரம் வைத்துள்ள விமர்சனத்தில், இந்தியா கடைசியாக சர்வதேச டி 20 போட்டியில் கடந்த மார்ச் மாதம் ஆடியது. அதன்பின் எந்த டி 20 தொடரிலும் ஆடவில்லை. நாம் இப்போது நவம்பரில் இருக்கிறோம். இடையில் இந்திய அணி ஐபிஎல்லில் மட்டும்தான் ஆடினார்கள். இதுதான் சிக்கல்.

சீரியஸ்
இந்திய வீரர்கள் சர்வதேச போட்டிகளில் சீரியஸாக எடுத்துக்கொள்வது கிடையாது. ஐபிஎல் போதும் என்று அவர்கள் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். நீங்கள் எத்தனை லீக் போட்டிகளில் வேண்டுமானாலும் ஆடிக்கொள்ளுங்கள். லீக் போட்டிகளில் நீங்கள் ஒன்றிரண்டு நல்ல பவுலர்களைத்தான் எதிர்கொள்வீர்கள்.

நல்ல பவுலர்
ஆனால் சர்வதேச போட்டிகளில் ஒரு அணியை எதிர்த்து ஆடினால் 5 நல்ல பவுலர்களை எதிர்த்து ஆடுவார்கள். இது வேறு மாதிரியான அனுபவத்தை கொடுக்கும். அந்த அனுபவம் இந்திய வீரர்களிடம் இல்லை. கடந்த போட்டி முழுக்க நியூசிலாந்து அணிக்கு சாதகமாக இருந்தது. அவர்கள் டாஸ் தோல்வி அடைந்தது, மன ரீதியாக தோல்வியை நோக்கி சென்றுவிட்டனர்.
Recommended Video

ரோஹித் சர்மா
முக்கியமாக ரோஹித் சர்மாவை 3வது இடத்தில் களமிறங்கியது மிகப்பெரிய தவறாக முடிந்தது. ஒரு முக்கியமான ஆட்டத்தில் இப்படி செய்ய கூடாது. அவர் டி 20 தொடக்க வீரராக நான்கு செஞ்சுரி அடித்தவர். அவரை இப்படி 3வது இடத்தில் இறக்குவது சரியான முடிவு கிடையாது, என்று அக்ரம் விமர்சனம் வைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications