திருவிழா கோலம் பூண்ட ஈரோடு கிழக்கு..பணமழை..கட்டுப்படுத்த வந்த 2 கம்பெனி மத்திய படை வீரர்கள்
ஈரோடு: இடைத்தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக மத்திய தொழில் பாதுகாப்பு படை, ரயில்வே பாதுகாப்பு படை என மொத்தம் 2 கம்பெனியை சேர்ந்த 180 வீரர்கள் ஈரோடு வந்துள்ளனர். இந்தோ- திபெத்திய பாதுகாப்பு படை வீரர்களும் ஈரோடு வர உள்ளனர். 27 ஆம் தேதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் ஈரோடு கிழக்குத் தொகுதி திருவிழா கோலம் பூண்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27ம்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக பாஜக கூட்டணி வேட்பாளராக தென்னரசு களமிறங்கியுள்ளார். நாம் தமிழர் கட்சி, தேமுதிக வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். நான்கு முனை போட்டி நிலவுவதால் ஈரோடு கிழக்குத் தொகுதி திருவிழா கோலம் பூண்டுள்ளது. முக்கிய கட்சிகளின் நிர்வாகிகள் அனைவரும் ஈரோடு கிழக்கு தொகுதியில் முற்றுகையிட தொடங்கி விட்டனர்.

தேர்தல் அதிகாரிகளும் பாதுகாப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சியினர் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை சந்தித்து புகார் அளித்தனர். ஆளும் திமுக அரசு தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுவதாக அளித்த புகாரை அடுத்து அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இரு தினங்களுக்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய சத்யபிரதா சாகு, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பாதுகாப்பு பணிக்காக ஏற்கனவே 2 கம்பெனி துணை ராணுவப்படை அனுப்பப்பட்டு உள்ளது. இதுதவிர கூடுதலாக 3 கம்பெனி துணை ராணுவப்படையை தேர்தல் கமிஷன் அனுப்புகிறது. இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா குறித்த புகார்கள் வந்ததை தொடர்ந்து, அதைத் தடுக்க 6 பறக்கும்படை அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை அங்கு ரூ.25.43 லட்சம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. வாகன சோதனை தொடர்ந்து தினமும் நடத்தப்படுகிறது.
24 மணி நேரமும் சோதனை சாவடிகள் மூலம் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. 6 பறக்கும்படை குழுக்கள் 3 ஷிப்ட்களில் பணியாற்றி வருகின்றனர். பணப்பட்டுவாடா குறித்த புகார் வந்ததும் சம்பவ இடத்துக்கு செல்ல பறக்கும் படையினர் எப்போதும் தயார் நிலையில் உள்ளனர். பணப்பட்டுவாடாவை தடுக்க மேலும் பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் கமிஷன் தொடர்ந்து எடுக்கும். தேர்தல் பார்வையாளர்கள் கூடுதலாக தேவைப்பட்டால் அவர்களையும் தேர்தல் கமிஷன் நியமிக்கும்.
அ.தி.மு.க. சார்பில் 5 வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பட்டியல் பற்றி தேர்தல் கமிஷனிடம் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் அந்த வாக்குச்சாவடிகளில் உள்ள வாக்காளர் பட்டியலை சரிபார்த்ததில் அது சரியாகத்தான் உள்ளது என்று கூறினார்.
இந்நிலையில் இடைத்தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 2 கம்பெனி மத்திய படை வீரர்கள் ஈரோடு வந்தடைந்தனர். மத்திய தொழில் பாதுகாப்பு படை, ரயில்வே பாதுகாப்பு படை என மொத்தம் 2 கம்பெனியை சேர்ந்த 180 வீரர்கள் வந்தனர். இடைத்தேர்தல் நடக்க உள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் மத்திய படைவீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். தொடர்ந்து இந்தோ- திபெத்திய பாதுகாப்பு படை வீரர்களும் ஈரோடு வர உள்ளனர்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications