Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காந்தி ஜெயந்திக்கு “லீவ்” கொடுக்கல.. அதிரடி ரெய்டு.. ஈரோட்டில் 82 நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு!

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: காந்தி ஜெயந்தி நாளான இன்று ஊழியர்களுக்கு விடுமுறை வழங்காத 82 நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வைத் தொடர்ந்து இன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இன்று அக்டோபர் 2, காந்தி ஜெயந்தி தேசிய விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இன்று பள்ளி, கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு விடுமுறை விட்டுள்ளன. மேலும், மதுபானக் கடைகள், இறைச்சிக் கடைகளும் இன்று மூடப்பட்டுள்ளன.

gandhi jayanti erode holiday

அதேசமயம், அரசு அறிவுறுத்தலை மீறி தேசிய விடுமுறை நாளான இன்று, பல தனியார் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு விடுப்பு வழங்காமல் இருந்துள்ளன. ஈரோடு மாவட்டத்தில் இதுதொடர்பாக தங்களுக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்திய பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கவில்லை எனத் தெரியவந்தது. இதையடுத்து, தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் புகாரின் பேரில் 82 நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+