ஈரோட்டில் பார்த்தீங்களா? மொத்தமா வந்த ஜவுளி வியாபாரிகளால் ஒரே பரபரப்பு.. டெல்லியை உலுக்கிய 43 B(H)
ஈரோடு: ஈரோட்டையே இன்று ஸ்தம்பிக்க வைத்திருக்கும், புதிய வருமான வரி சட்டம் 43 B(h) என்பது என்ன? ஜவுளி வியாபாரிகள் மொத்தமாக திரண்டு, கடையடைப்பு போராட்டம் நடத்தி, மத்திய அரசுக்கு எதிர்ப்பு காட்டி வர என்ன காரணம்?
சிறு, குறு தொழில்கள் தங்களது வணிக கடன்களை, வேகமாக வசூல் செய்வதற்கு வசதியாக, வருமான வரிச்சட்டத்தில் மத்திய அரசு மாற்றம் கொண்டு வந்துள்ளது.
வருமான வரிச்சட்டம்: அதன்படி, செக்சன் 43 B (H) மாற்றமானது வருகிற மார்ச் மாதம் 31-ந் தேதியிலிருந்து அமலுக்கு வருகிறது. அதன்படி, தங்கள் இருப்பு நிலை குறிப்பு (Balance Sheet) கணக்கில் இருக்கும் வணிக கடன் நிலுவைகள் 45 நாட்களுக்கு மேலே சென்றிருந்தால், அவை வருமானமாக கருதப்படும். அதற்கு வருமான வரியும் செலுத்த வேண்டும். இதுதான் அந்த சட்ட மாறுதல்.

இந்த சட்டமாற்றமானது, ஜவுளித்துறையை நேரடியாக பாதிப்புக்கு உள்ளாக்கு என்கிறார்கள்.. காரணம், ஜவுளி தொழிலை பொறுத்தவரை, துணிகளை கொள்முதல் செய்து, பிராசசிங், டையிங், பிரிண்டிங், ஸ்டிச்சிங் என ஏகப்பட்ட விஷயங்களை கடந்துதான், விற்பனை செய்ய வேண்டி வருகிறது.. அதற்கேற்ப 45 நாட்களுக்குள் அல்லது அதற்கு மேலான நாட்களின் கடன் தொகையை நேர் செய்வார்கள்.
புதிய சட்டம்: ஆனால், தற்போது வரப்போகும் புதிய திருத்தத்தினால், அந்த தொகைக்கு வருமான வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டால், ஜவுளித்தொழில் கடுமையாக பாதிப்படையும்.
அதனால்தான், சட்ட திருத்தத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு மத்திய அரசு செவிசாய்க்கவில்லை என்றே தெரிகிறது. பிறகு, ஒரு வருடத்துக்காவது இந்த புதிய விதிகளை அமல்படுத்தாமல் ஒத்திவைக்க வேண்டும் என்று ஈரோடு கிளாத் மெர்செண்ட்ஸ் அசோசியேஷன் சார்பில் தொடர் கோரிக்கைகள் வைக்கப்பட்டது. இதற்கும் மத்திய அரசுதரப்பில் சாதகமான பதில் கிடைக்கவில்லை.
ஜவுளி கடைகள்:அதனால்தான், இன்றைய தினம் ஜவுளி வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தை அறிவித்திருந்தனர். ஜவுளி வணிகர்களின் இந்த கடையடைப்பு போராட்டத்திற்கு 20-க்கும் மேற்பட்ட சங்கங்களும் உடனடியாக ஆதரவு தெரிவித்தன.. அத்துடன் அரசியல் கட்சிகளும் தங்கள் ஆதரவுக்கரங்களை ஜவுளி தொழிலாளர்களுக்காக நீட்டிவிட்டன.
இதையடுத்து, ஈரோட்டில் ஜவுளி கடைகள் முழுவதுமே அடைக்கப்பட்டுவிட்டன. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைதறி உரிமையாளர்களும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஈரோடு கனி மார்க்கெட் ஜவுளி சந்தையும், உடனடியாக ஆதரவை தந்ததுடன் அவர்களும் சேர்ந்து இன்று கடையடைப்பில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜவுளி கடைகளும் இன்று அடைக்கப்பட்டுள்ளன.
ஸ்தம்பித்த ஈரோடு: இன்று ஒரு நாள் கடை அடைப்பு நடத்தினால், ரூ.7 கோடி மதிப்பிலான துணி உற்பத்தி பாதிக்கப்படுவதுடன், ரூ.100 கோடி மதிப்பிலான வர்த்தகமும் பாதிக்கப்படும் என்றபோதிலும், வியாபாரிகள் இந்த கடையடைப்பை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு, பவானி, சித்தோடு, பி.பி.அக்ரஹாரம், பள்ளிபாளையம் என 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இன்றைய போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள். மத்திய அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக இன்று நடத்தும் ஜவுளி ஸ்டிரைக், டெல்லியின் பார்வையை திருப்புமா? பொறுத்திருந்து பார்ப்போம்..!!
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications