Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பத்திரப்பதிவு.. ஈரோடு சத்தியமங்கலம் சார் பதிவாளர்.. தப்பிக்க வேண்டியவர்.. கடைசி நொடியில் ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள அரியப்பம்பாளையத்தை சேர்ந்த நல்லம்மாள் என்பவர் தனக்கு சொந்தமான 1,916 சதுர அடி காலி இடத்தை தனது பேரன் அருணுக்கு பத்திரப்பதிவு செய்ய முடிவு செய்தார். ஆனால் பத்திரப்பதிவு செய்ய ரூ.15 ஆயிரம் லஞ்சமாக கொடுக்க வேண்டும் என சார் பதிவாளர் கேட்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் சார் பதிவாளரும், தற்காலிக ஊழியரும் கையும் களவுமாக சிக்கியுள்ளனர்.

பத்திரப்பதிவு அலுவலகங்களில் லஞ்சம் கேட்கும் சார் பதிவாளர்கள் குறித்து அவ்வப்போது புகார்கள் வருவது உண்டு. இப்படிப்பட்டவர்கள் மீது மாவட்டப் பதிவாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கலாம். அவர்கள் விசாரித்து நடவடிக்கை எடுப்பார்கள்.

Erode Sub-registrar arrested for accepting bribe of 15000 for deed registration in Sathyamangalam

அதேநேரம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், கையும் களவுமாக சிக்க வைக்கவும் விரும்பினால், லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளிக்கலாம். அவர்களின் வேலையே அரசு ஊழியர்களின் ஊழலை விசாரித்து நடவடிக்கை எடுப்பது தான். ஆடியோ ஆதாரம் அல்லது வீடியோ ஆதாரம் இருந்தால், கையும் களவுமாக சிக்க வைக்க புகாரை உடனே எடுப்பார்கள். ரகசியமாக சென்று லஞ்சப்பணத்தை கொடுக்க வைத்து பிடிப்பார்கள். சமீப காலமாக ஏராளமான அதிகாரிகள் இப்படி சிக்கியுள்ளனர். விஏஓ முதல் தாசில்தார் வரையிலும், உதவியாளர் முதல் சார் பதிவாளர் வரையிலும் எல்லா துறையிலும் புகார் அளித்து நடவடிக்கை எடுக்க வைக்க முடியும்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள அரியப்பம்பாளையத்தை சேர்ந்தவர் நல்லம்மாள் என்பவருக்கு 1,916 சதுர அடி காலி இடம் இருக்கிறது. நல்லம்மாள் தனது பேரன் அருணுக்கு பத்திரப்பதிவு செய்ய நம்பியூர் சின்ன பீளமேட்டை சேர்ந்த ஆன்லைன் சர்வீஸ் செய்து வரும் சேதுபதி (வயது 32) என்பவரை அணுகியிருக்கிறார்.

சேதுபதி இதுகுறித்து நேற்று சத்தியமங்கலத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்துக்கு சென்று சார்பதிவாளர் தமிழ்ச்செல்வன் (51) என்பவரிடம் தெரிவித்துள்ளார். அதற்கு அவர், பத்திரப்பதிவு செய்ய ரூ.15 ஆயிரம் லஞ்சமாக கொடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். ஆனால் லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத சேதுபதி இதுகுறித்து ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் சென்று புகார் அளித்தார்.

இதைத்தொடர்ந்து ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய ரூ.15 ஆயிரத்தை சேதுபதியிடம் கொடுத்து அனுப்பி உள்ளார்கள். இதையடுத்து அவர் நேற்று காலை 11 மணி அளவில் சத்தியமங்கலம் சார்பதிவாளர் அலுவலகம் சென்று சார்பதிவாளர் தமிழ்ச்செல்வனிடம் ரூ.15 ஆயிரத்தை கொடுக்க முயன்றுள்ளார்.

அதற்கு தமிழ்ச்செல்வன், அந்த பணத்தை தற்காலிக ஊழியரான தர்மபுரி மாவட்டம் பாப்பராம்பட்டியை சேர்ந்த 35 வயதாகும் சக்திவேல் என்பவரிடம் கொடுத்து விடும்படி கூறினாராம். இதையடுத்து கடைசி நொடியில் அவர் தற்காலிக ஊழியர் சக்திவேலிடம் பணத்தை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சக்திவேலையும், சார்பதிவாளர் தமிழ்ச்செல்வனையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+