ராகுல்-டிகே சிவக்குமார் சந்திப்பு.. காரணம் இதுதான்.. கர்நாடகாவில் அரசியலில் அடுத்தடுத்து திருப்பம்!
டெல்லி: டெல்லியில் ராகுல் காந்தியுடன், கர்நாடகா மாநில தலைவர் டிகே சிவக்குமார் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இன்று முதல்வர் யார் என்பது பற்றிய அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில் சற்று முன்னதாக சித்தராமையா, ராகுல் காந்தியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த புறப்பட்ட நிலையில் டிகே சிவக்குமார் சந்திப்பு நடந்து வருகிறது.
கர்நாடகாவில் முதல்வர் பதவியை பெறுவதில் சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமார் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதில் இருவரும் தங்களது உழைப்பு பற்றிய விஷயங்களை எடுத்து கூறியும், எதற்காக தனக்கு முதல்வர் வழங்க வேண்டும் என்பது பற்றியும் கட்சி மேலிட தலைவர்களிடம் எடுத்து கூறி வருகின்றனர்.

இந்நிலையில் தான் இன்று சித்தராமையா ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். சுமார் 20 நிமிடங்கள் வரை இந்த பேச்சுவார்த்தை நடந்தது. இதையடுத்து டிகே சிவக்குமார் ராகுல் காந்தியை சந்தித்து பேசி வருகிறார். கர்நாடகாவின் முதல்வராக சித்தராமையாவின் பெயர் இறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் தான் இந்த சந்திப்பு என்பது நடந்து வருகிறது.
இதனால் இந்த சந்திப்பு என்பது டிகே சிவக்குமாரை சமாதானப்படுத்தும் வகையில் தான் இருக்கும் எனவும், அதேநேரத்தில் காங்கிரஸ் கட்சி எப்போதும் டிகே சிவக்குமாருக்கு ஆதரவாக இருக்கும் என்பதையும் ராகுல் காந்தி கூறலாம் என கூறப்படுகிறது. மேலும் துணை முதல்வர் பதவியோடு முக்கிய துறையை கையாள வேண்டும் என டிகே சிவக்குமாருக்கு ராகுல் காந்தி அறிவுறுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications