Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஈரோட்டில் தோழியை மணந்து இரு குழந்தைகளை நரபலி கொடுக்க திட்டமிட்ட தாய் உள்பட 5 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: ஈரோட்டில் மகன்களை நரபலி கொடுக்க திட்டமிட்ட தாய், தந்தை உள்பட 5 பேரை போலீஸார் கைது செய்யப்பட்டனர்.

Recommended Video

    ஈரோடு: சிவன் அருள் பெற... சிறுவர்களை நரபலி கொடுக்க திட்டம்... பெற்றோர் உள்பட 5 பேர் போலீசில் சிக்கினர்!

    புஞ்சை புளியம்பட்டி சுந்தரம் வீதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம் (43). ஜவுளி வியாபாரி. இவருடைய மனைவி ரஞ்சிதா (36).

    இவர்களுக்கு தீபக் (15), கிஷாந்த் (6) ஆகிய இரு மகன்கள் உள்ளனர். இவர்களை இருவரையும் ரஞ்சிதாவும் அவரது குடும்பத்தினரும் சேர்ந்து நரபலி கொடுக்க திட்டமிட்டதாக ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டது.

    பாட்டி

    பாட்டி

    இதைத் தொடர்ந்து தீபக், கிஷாந்த் தனது பாட்டி, தாத்தாவுடன் கடந்த 13-ஆம் தேதி ஈரோடு தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறுகையில், எனது மருமகன் ராமலிங்கம். இந்துமதி (32) என்ற பெண்ணை கடந்த 6-ஆண்டுகளுக்கு முன்னர் எனது மகள் ரஞ்சிதாவின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

    படிக்கவிடாமல்

    படிக்கவிடாமல்

    3 பேரும் ஈரோடு ரங்கம்பாளையம் ரயில்வே நகரில் வசித்து வந்தனர். இவர்களுடன் இந்துமதிக்கு பழக்கமான தனலட்சுமி என்கிற சசியும் (39) வசித்து வந்தார். எனது மகள், மருமகன், இந்துமதி, தனலட்சுமி ஆகிய 4 பேரும் கூட்டு சேர்ந்து எனது பேரன் தீபக்கை படிக்கவிடாமல் பள்ளியிலிருந்து மாற்றுச் சான்றிதழ் வாங்கி கொடுமைப்படுத்தி வருகிறார்கள்.

    பள்ளியில் சேர்க்கவில்லை

    பள்ளியில் சேர்க்கவில்லை

    இளைய பேரன் கிஷாந்திற்கு 6 வயதாகியும் இதுவரை பள்ளியில் சேர்க்கவில்லை. இவர்கள் இருவரையும் வீட்டில் துணி துவைக்க வைத்தும், பாத்திரம் கழுவ வைத்தும், சரியாக செய்யவில்லை என்றால் அடித்தும் உடம்பில் சூடு போட்டும் மிளகாய் பொடி சாப்பாட்டை கொடுத்தும் கொடுமைப்படுத்தி வந்ததாகவும் புகாரில் தெரிவித்துள்ளனர்.

    பூஜைகள்

    பூஜைகள்

    எனது மகள் இரவு நேரத்தில் கடவுள் வேடம் அணிந்து கொண்டு பூஜைகளை செய்து வந்தார். எனது மகளும் சசியும் திருமணம் செய்து கொண்டதாக எனது பேரன்கள் கூறுகிறார்கள். இதையடுத்து எனது பேரன்களை பலி கொடுத்தால் கூடுதல் சக்தி கிடைக்கும் என இருவரும் பேசி கொண்டதை அடுத்து சிறுவர்கள் யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டனர்.

    பெருந்துறை

    பெருந்துறை

    இதுகுறித்து நானும் எனது கணவரும் அவர்களிடம் முறையிட்ட போது குடும்ப விஷயத்தில் தலையிட வேண்டாம் என கூறி விரட்டி விட்டனர் என மனுவில் கொடுத்திருந்தார். இதையடுத்து ஈரோடு பெருந்துறை தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்கள்.

    மனைவிகள்

    மனைவிகள்

    அப்போது ஈரோடு பெருந்துறை ரோடு பவளத்தம்பாளையம் பகுதியில் வாகனத் தணிக்கையில் போலீஸார் ஈடுபட்டிருந்த போது இரு கார்களை சோதனை செய்தனர். அதில் இருந்த ராமலிங்கம், அவரது மனைவிகள் ரஞ்சிதா, இந்துமதி மற்றும் தனலட்சுமி என்கிற சசி (38), இவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து வந்த சேலம் மாவட்டம் எடப்பாடி இருப்பாளியை சேர்ந்த மாரியப்பன் (42) ஆகியோரை கைது செய்து கார்களையும் பறிமுதல் செய்தனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+