அதிமுகவிலிருந்து நீக்கம்! பிரஸ் மீட்டிற்கு பிறகு ஆடியோ கிளிப்பில் செங்கோட்டையன் போட போகும் அணுகுண்டு!
ஈரோடு: கோபிச்செட்டிபாளையம் குள்ளம்பாளையத்தில் உள்ள தனது வீட்டில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்திக்கிறார். அதன் பிறகு ஒரு முக்கிய ஆடியோவையும் அவர் வெளியிட போகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக பிரத்யேக ஸ்பீக்கர்கள் அங்கு பொருத்தப்பட்டு வருகின்றன.
ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோருடன் பசும்பொன்னில் செங்கோட்டையன் கை கோர்த்ததால் அவரை அதிமுகவிலிருந்து பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நீக்கி உத்தரவிட்டார்.

இதுகுறித்து செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் கேட்ட போது இன்று காலை 11 மணிக்கு விளக்கம் அளிக்கிறேன் என செங்கோட்டையன் தெரிவித்தார். அந்த வகையில் குள்ளம்பாளையத்தில் தனது வீட்டில் இன்னும் சற்று நேரத்தில் செய்தியாளர்களை சந்திக்கிறார்.
இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அங்கு ஒரு சிறிய ஸ்பீக்கரும் பொருத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து கேட்ட போது செய்தியாளர்கள் சந்திப்பு முடியும் போது செங்கோட்டையன் ஒரு ஆடியோவையும் போட்டுக் காட்ட போகிறாராம்.
அந்த ஆடியோவில் என்ன இருக்கிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. செங்கோட்டையன் பேச்சை கேட்க அவரது வீட்டில் ஆதரவாளர்கள் குவிந்து வருகிறார்கள். ஓபிஎஸ் ஆதரவாளர்களும் செங்கோட்டையனை சந்தித்தார்கள்.












Click it and Unblock the Notifications