இப்படி பண்றீங்களேம்மா.. மதுரவாயலை தொடர்ந்து ஈரோட்டிலும் கள்ள ஓட்டு.. வாக்காளர் பரபர புகார்
ஈரோடு: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்று நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். தமிழகத்தில் இந்தமுறை 4 முனை போட்டி நிலவுகிறது. திமுக, அதிமுக, நாம் தமிழர், தவெக கட்சிகள் போட்டியிட்டுள்ளனர். இந்நிலையில், ஈரோடு கிழக்குத் தொகுதி குமலன்குட்டை வாக்குச் சாவடியில் வாக்களிக்கச் சென்ற வாக்காளர், ஏற்கனவே தன்னுடைய வாக்கு போடப்பட்டுள்ளதாக தேர்தல் அலுவலரிடம் புகார் கூறியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்குச் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் இந்தமுறை 4 முனை போட்டி நிலவுகிறது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக கட்சிகள் போட்டியிட்டுள்ளனர். கடந்த முறையை விட இந்த முறை அதிகளவிலான வாக்குகள் பதிவாகி வருகின்றன. மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.

கள்ள ஓட்டு புகார்
மதுரவாயலை தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதியிலும் தனது வாக்கு ஏற்கனவே செலுத்தப்பட்டுள்ளதாக வாக்காளர் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் கூறியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு கிழக்குத் தொகுதி குமலன்குட்டை வாக்குச் சாவடியில் தனது வாக்கு ஏற்கெனவே போடப்பட்டுள்ளதாக தினேஷ் என்பவர் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் தெரிவித்துள்ளார். ஈரோடு குமலன்குட்டை பகுதிக்கு தினேஷ் என்பவர் இன்று காலை வாக்கு செலுத்துவதற்காக வந்துள்ளார். அப்போது, இவருடைய வாக்கை வேறு யாரோ செலுத்தியிருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அதிர்ச்சியடைந்த தினேஷ், உடனடியாக தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் அளித்தார்.
வாக்கு செலுத்தலாம்
இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட தேர்தல் அலுவலர் அர்பித் ஜெயின் அவருடைய வாக்கு ஏற்கனவே செலுத்தப்பட்டிருந்தது உறுதி செய்ததையடுத்து, தினேஷை 49 ஓ விதிப்படி வாக்கு செலுத்த ஏற்பாடு செய்யப்படும் என்று விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க சொல்லியிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த கள்ள ஓட்டு சம்பவம் தொடர்பாக தேர்தல் அதிகாரி விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக தினேஷ் தெரிவித்தார். மதுரவாயலைத் தொடர்ந்து ஈரோட்டிலும் கள்ள ஓட்டு செலுத்தப்பட்டுள்ள சம்பவம் தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.













Click it and Unblock the Notifications