7 வருடமாக.. பிஞ்சு சிறுமியை.. ஒரே அறையில் அடைத்து வைத்து இருந்து கொடூர தந்தை.. என்ன காரணம்?
ஓசூர்: ஓசூர் அருகே கிராமம் ஒன்றில் சிறுமி ஒருவர் 7 வருடமாக ஒரே அறையில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
2015ல் வெளியாகி 4 ஆஸ்கர் விருதுகளை குவித்த ஆங்கில படம் ரூம். ஒரே அறையில் அம்மா, மகளை கடத்தல்காரன் ஒருவன் பல வருடங்கள் அடைத்து வைத்து இருப்பதும், அந்த ரூமிற்கு உள்ளேயே அந்த குழந்தை வளர்வதும்தான் இந்த படத்தின் கதை. படத்தின் கிளைமேக்சில் அந்த குழந்தை ரூமை விட்டு முதல் முறை வெளியே வரும் காட்சி பார்ப்பவர்கள் மனதை உருக்கும்.
அப்படி ஒரு சம்பவம்தான் ஓசூர் அருகே நடந்துள்ளது. ஓசூர் அருகே இருக்கும் கர்நாடகாவை மாநிலத்தை சேர்ந்த கிராமம் காளிபீடு. இங்கு கூலித்தொழில் செய்து வருபவர் தனஞ்செயா.

கொடுமை
2014ம் வருடம் இவரின் மனைவி உடல்நிலை குறைவு காரணமாக மரணம் அடைந்தார். அவர்களுக்கு அப்போது 7 வயது பெண் சிறுமி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தாய் இறந்த செய்தி கேட்டு அந்த 7 வயது பிஞ்சு சிறுமி மனம் உடைந்து போனார். அம்மா போன சோகத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் தினமும் அழுது இருக்கிறார். அம்மாவின் இழப்பை அவரால் ஏற்கவே முடியவில்லை. தினமும் கண்ணீர்விட்டு, அழுது சோகமாக இருந்தவர் ஒரு கட்டத்திற்கு மேல் மன ரீதியாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்.

மன ரீதியாக பாதிப்பு
அம்மா, அம்மா என்று வீட்டிற்கு உள்ளேயே கத்த தொடங்கி உள்ளார். மன அழுத்தம் காரணமாக அந்த சிறுமி இப்படி நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த சிறுமியை முதலில் சில மருத்துவர்களிடம் கொண்டு சென்று இருக்கிறார். அவர்களும் சில மருந்துகளை கொடுத்துள்ளனர். சில நாட்கள் நன்றாக இருந்த அந்த சிறுமி பின்னர் மீண்டும் அதேபோல் மோசமான மனநிலைக்கு வந்து இருக்கிறார்.

அடைத்து வைத்தார்
அம்மாவின் பிரிவை ஏற்றுக்கொள்ள முடியாமல் விடாமல் கண்ணீர்விட்டு கத்தி உள்ளார். மேல் சிகிச்சைக்கு கொஞ்சம் கூடுதல் செலவு செய்தால் அவரை குணப்படுத்த முடியும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆனால் பெற்ற மகளுக்கு செலவு செய்ய விரும்பாத தந்தை தனஞ்செயா மகளுக்கு சிகிச்சை அளிக்க மறுத்துள்ளார். அதோடு மகளை அருகே ஒரு குட்டி வீட்டில் அடைத்து வைத்துள்ளார். நாய்களுக்கு கட்டப்படுவது போல குட்டி வீட்டில் சங்கிலி கட்டி அடைத்து வைத்து இருக்கிறார்.

7 வருடம்
இப்படி ஒருநாள், இரண்டு நாள் அல்ல மொத்தம் 7 வருடம் அந்த சிறுமியை அவரின் அப்பாவே அடைத்து வைத்து இருக்கிறார். அதிலும் தினமும் ஒருவேளை உணவு மட்டும் கொடுத்து கொடுமைப்படுத்தி உள்ளார். அந்த அறைக்கு உள்ளேயே அந்த சிறுமி இயற்கை உபாதைகளையும் கழித்து இருக்கிறார். இத்தனை வருடமாக அந்த சிறுமி வெளி உலகத்தையே பார்க்கவில்லை என்றும் கூறப்படுகிறது. என் பொண்ணுக்கு பைத்தியம்.. அதனால்தான் இப்படி என்று ஊர்காரர்களிடம் அப்பா தனஞ்செயா காரணம் சொல்லி இருக்கிறார்.

போலீஸ் கைது
இதை ஊர்காரர்களும் நம்பி இருக்கிறார்கள். இதையடுத்து அப்பகுதிக்கு தொண்டு பணிகளை செய்ய வந்த தின்மயா என்ற பெண் இந்த விஷயம் அறிந்து போலீசுக்கு புகார் அளித்துள்ளார். உடனடியாக அங்கு வந்த போலீசார் அந்த சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். 7 வருடங்களுக்கு பின் முதல்முறையாக அந்த சிறுமி வெளி உலகத்தை நேற்றுதான் பார்த்தார். அதோடு தனஞ்செயாவை கைது செய்த போலீசார் காவல்நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications