சந்திரசேகர் ராவ் அடுத்த 48 மணி நேரத்திற்கு பிரச்சாரம் செய்ய தடை! தேர்தல் ஆணையம் அதிரடி! பின்னணி என்ன
ஹைதராபாத்: தெலுங்கானா முன்னாள் முதல்வரும், பிஆர்எஸ் கட்சித் தலைவருமான சந்திரசேகர் ராவ், பிரச்சாரம் செய்வதற்கு 48 மணி நேரம் தடை விதித்துள்ளது தேர்தல் ஆணையம்.
பிஆர்எஸ் தலைவர் சந்திரசேகர் ராவ், காங்கிரஸ் கட்சிக்கு எதிராக இழிவான மற்றும் ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததாக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.நிரஞ்சன் அளித்த புகாரின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது.

தெலுங்கானா முன்னாள் முதலமைச்சர் கே. சந்திரசேகர ராவ் கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி சிர்சில்லா பகுதியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் காங்கிரஸ் கட்சி குறித்து அவதூறாக பேசியதாகவும், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய சந்திரசேகர ராவ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெலங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.நிரஞ்சன் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகார் குறித்து ரஞ்சன்னா சிர்சில்லா மாவட்ட தேர்தல் அதிகாரி சார்பில் தேர்தல் ஆணையத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, காங்கிரஸ் கட்சி குறித்து அவதூறு கருத்து வெளியிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.
ஏப்ரல் 18ஆம் தேதி காலை 11 மணிக்குள் புகார் தொடர்பாக அறிக்கை அளிக்காத பட்சத்தில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியது தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில், தேர்தல் ஆணையம் அளித்த நோட்டீஸுக்கு உரிய வகையில் சந்திரசேகர் ராவ் பதில் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, சந்திர சேகர் ராவ் பிரச்சாரம் மேற்கொள்ள 48 மணி நேரத்திற்கு தடை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது தேர்தல் ஆணையம்.
அரசியல் சாசனத்தின் 324வது பிரிவை மேற்கோள் காட்டி, இன்று இரவு 8 மணி முதல் அடுத்த 48 மணி நேரத்திற்கு, சந்திரசேகர் ராவ் பொதுக்கூட்டங்கள், பொது ஊர்வலங்கள், நிகழ்ச்சிகள் மற்றும் நேர்காணல்களில் பங்கேற்கக்கூடாது என்றும் ஊடகங்களில் (மின்னணு, அச்சு, சமூக ஊடகங்கள்) பகிரங்கமாக பேசக்கூடாது என்றும் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
நான்காம் கட்ட தேர்தலில் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 17 மக்களவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. மே 13ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் தெலுங்கானாவில் தேர்தல் பிரச்சாரம் பரபரத்து வருகிறது. இந்நிலையில் கேசிஆர் பிரச்சாரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது பி.ஆர்.எஸ் கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications