சந்திரசேகர் ராவ் அடுத்த 48 மணி நேரத்திற்கு பிரச்சாரம் செய்ய தடை! தேர்தல் ஆணையம் அதிரடி! பின்னணி என்ன
ஹைதராபாத்: தெலுங்கானா முன்னாள் முதல்வரும், பிஆர்எஸ் கட்சித் தலைவருமான சந்திரசேகர் ராவ், பிரச்சாரம் செய்வதற்கு 48 மணி நேரம் தடை விதித்துள்ளது தேர்தல் ஆணையம்.
பிஆர்எஸ் தலைவர் சந்திரசேகர் ராவ், காங்கிரஸ் கட்சிக்கு எதிராக இழிவான மற்றும் ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததாக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.நிரஞ்சன் அளித்த புகாரின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது.

தெலுங்கானா முன்னாள் முதலமைச்சர் கே. சந்திரசேகர ராவ் கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி சிர்சில்லா பகுதியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் காங்கிரஸ் கட்சி குறித்து அவதூறாக பேசியதாகவும், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய சந்திரசேகர ராவ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெலங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.நிரஞ்சன் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகார் குறித்து ரஞ்சன்னா சிர்சில்லா மாவட்ட தேர்தல் அதிகாரி சார்பில் தேர்தல் ஆணையத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, காங்கிரஸ் கட்சி குறித்து அவதூறு கருத்து வெளியிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.
ஏப்ரல் 18ஆம் தேதி காலை 11 மணிக்குள் புகார் தொடர்பாக அறிக்கை அளிக்காத பட்சத்தில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியது தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில், தேர்தல் ஆணையம் அளித்த நோட்டீஸுக்கு உரிய வகையில் சந்திரசேகர் ராவ் பதில் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, சந்திர சேகர் ராவ் பிரச்சாரம் மேற்கொள்ள 48 மணி நேரத்திற்கு தடை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது தேர்தல் ஆணையம்.
அரசியல் சாசனத்தின் 324வது பிரிவை மேற்கோள் காட்டி, இன்று இரவு 8 மணி முதல் அடுத்த 48 மணி நேரத்திற்கு, சந்திரசேகர் ராவ் பொதுக்கூட்டங்கள், பொது ஊர்வலங்கள், நிகழ்ச்சிகள் மற்றும் நேர்காணல்களில் பங்கேற்கக்கூடாது என்றும் ஊடகங்களில் (மின்னணு, அச்சு, சமூக ஊடகங்கள்) பகிரங்கமாக பேசக்கூடாது என்றும் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
நான்காம் கட்ட தேர்தலில் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 17 மக்களவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. மே 13ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் தெலுங்கானாவில் தேர்தல் பிரச்சாரம் பரபரத்து வருகிறது. இந்நிலையில் கேசிஆர் பிரச்சாரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது பி.ஆர்.எஸ் கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications