சூட்டிங் ஸ்பாட்டில் இளம்பெண் பலாத்காரம்.. பிரபல நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் மீது பாய்ந்த வழக்கு
ஹைதராபாத்: சூட்டிங் ஸ்பாட்டில் வைத்து 21 வயது நிரம்பிய பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக பிரபல நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் மீது போலீசார் அதிரடியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடன இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் ஜானி மாஸ்டர். இவரது முழுப்பெயர் செய்க் ஜானி பாஷா. இவர் தமிழில் நடிகர் விஜய், தனுஷ் உள்ளிட்டவர்களுடன் நடன இயக்குநராக பணியாற்றி உள்ளார்.

இவர் தெலுங்கு சினிமாவில் அதிகமாக பணியாற்றி வருகிறார். நடிகர்கள் ராம் சரண், ஜூனியர் என்டிஆர், சிரஞ்சீவி உள்ளிட்டவர்களுடன் சேர்ந்து பணியாற்றி உள்ளார்.
இந்நிலையில் தான் ஜானி மாஸ்டர் மீது 21 வயது இளம்பெண் பாலியல் புகார் தெரிவித்துள்ளார். அதாவது ஜானி மாஸ்டருடன் சேர்ந்து பணியாற்றியபோது அவர் சென்னை உள்பட பல சூட்டிங் ஸ்பாட்டில் வைத்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக பரபரப்பை கிளப்பி உள்ளார். இதுதொடர்பாக அந்த பெண் சைபராபாத்தில் உள்ள ராய்துர்கம் போலீசில் புகாரளித்துள்ளார்.
அந்த புகாரில், ‛‛நான் கடந்த சில மாதங்களாக ஜானி மாஸ்டருடன் சில திரைப்படங்களில் பணியாற்றினே். அப்போது அவர் எனக்கு பாலியல் தொல்லை தந்தார். சென்னை, மும்பை, ஹைதராபாத் உள்பட பல இடங்களில் நடந்த சூட்டிங்கின்போது பலமுறை பலாத்காரம் செய்துள்ளார். அதேபோல் ஹைதராபாத்தில் நான் வசிக்கும் நார்சிங்கி பகுதியில் உள்ள வீட்டில் வைத்தும் பலாத்காரம் செய்துள்ளதாக புகாரில் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக போலீசார் சட்டப்பிரிவு 376 (பலாத்காரம்), 506 (மிரட்டல்), 323 (வலுக்கட்டாயமாக காயப்படுத்துதல்) உள்ளிட்ட பிரிவுகளில் ஜானி மாஸ்டர் மீது போலீசார் அதிரடியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுபற்றி மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‛‛பெண் அளித்த புகாரில் ஜானி மாஸ்டர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது பாதிக்கப்பட்ட பெண் நார்சிங்கி பகுதியில் வசித்து வருகிறார். இதனால் அந்த வழக்கு நார்சிங்கி போலீசுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இனி நார்சிங்கி போலீசார் விசாரணையை மேற்கொள்ள உள்ளனர்'' என தெரிவித்துள்ளார்.
தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள ஜானி மாஸ்டர் இப்படி சர்ச்சையில் சிக்குவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு கடந்த 2015ம் ஆண்டில் கல்லூரியில் ஏற்பட்ட பிரச்சனை தொடர்பான வழக்கில் அவருக்கு 6 மாதம் சிறை தண்டனையை அனுபவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications