ஒரே நாளில் டிரெண்டான சட்டிபாபு.. காத்துவாக்குல ரெண்டு காதல்.. சாத்தியமானது எப்படி?
ஒரே நாளில் டிரெண்டான தெலுங்கானா சட்டிபாபு.. காத்துவாக்குல ரெண்டு காதல்.. சாத்தியமானது எப்படி? என்பதை பார்க்கலாம்.
ஹைதராபாத்: 'ஐ லவ் யூ டூ' என்ற வார்த்தை சட்டிபாபு என்ற இளைஞருக்கு நிச்சயம் பொருந்தும். தெலுங்கானாவின் கடைக்கோடி கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் தான் இந்த சட்டி பாபு, இவரது காத்துவாக்குல இரண்டு காதலை அந்த ஊர் மக்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். இரண்டு காதலிகளும் வாழ்ந்தால் சட்டிபாபுகூட தான் என்று சொல்லி ஏற்றுக்கொண்டது எப்படி என்பதை பார்ப்போம்.
தெலுங்கானா மாநிலம் பத்ராத்ரி-கொத்தகுடேம் மாவட்டத்தில் உள்ள செர்லா மண்டலத்தில் எர்ரபோரு கிராமம் இருக்கிறது. இங்கு ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை பழங்குடி இளைஞர் சட்டிபாபு திருமணம் செய்துகொண்டிருக்கிறார்.
காவல்துறையின் நடவடிக்கை மற்றும் பொதுமக்களின் கோபத்திற்கு பயந்து, அவசர அவசரமாக பெண்களை திருமணம் செய்து கொண்டார் என்று உள்ளூர் செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

காதலித்தார்
சட்டிபாபு என்ற 25 வயது இளைஞர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, அவர்கள் படிக்கும் போது, ஸ்வப்னகுமாரி ஒருவரைக் காதலித்தார். காலப்போக்கில், அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது, ஆனால் தனிப்பட்ட காரணங்களால் ஒருவரையொருவர் திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்று முடிவு செய்தனர், இறுதியில் அவர்கள் தனித்தனியாக வாழத் தொடங்கினர்.

குழந்தை
இதற்கிடையில் குர்னவல்லி கிராமத்தை சேர்ந்த சுனிதா என்ற மற்றொரு பெண்ணை சத்திபாபு காதலித்து ஒன்றாக வாழ தொடங்கினார். இதையடுத்து சுனிதாவுக்கு குழந்தை பிறந்து தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளார்.

திருமணம்
இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் ஒரு கட்டத்தில் சுனிதாவுடனான சட்டிபாபுவின லைவ்-இன் உறவைப் பற்றி ஸ்வப்னா அறிந்ததும், அவரும் அதே வீட்டில் தங்க முடிவு செய்தார். பின்னர், சட்டிபாபுவின் இரு காதலையும் பெற்றோர் ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து ஒருவருக்கொருவர் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் ஒரு கட்டத்தில் சுனிதாவுடனான சட்டிபாபுவின லைவ்-இன் உறவைப் பற்றி ஸ்வப்னா அறிந்ததும், அவரும் அதே வீட்டில் தங்க முடிவு செய்தார். பின்னர், சட்டிபாபுவின் இரு காதலையும் பெற்றோர் ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து ஒருவருக்கொருவர் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

இரு பெண்கள்
திருமண அழைப்பிதழில் மணப்பெண் என சுனிதா மற்றும் ஸ்வப்னகுமாரி ஆகிய இரண்டு பெண்கள் பெயரும் இருந்தது. இருவரையும் வியாழக்கிழமை காலை சட்டிபாபு திருமணம் செய்யப்போகிறார் என்றும் திருமண அழைப்பிதழில் இருந்தது. இந்த அழைப்பிதழ் சமூக வலைதளங்களில் பெரிய அளவில் பரபரப்பாக பேசப்பட்டது.

3 பேரும் திருமணம்
வியாழக்கிழமை காலை திருமணம் நடைபெறவிருந்த நிலையில், திருமண அழைப்பிதழ் சர்ச்சையானதால் போலீஸ் கைது செய்வார்கள் என பயந்து போன 3 பேரும் நள்ளிரவில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். சட்டிபாபு திருமணம் செய்து கொண்ட புகைப்படத்தை பகிர்ந்த நெட்டிசன்கள், சட்டிபாபு, எப்படி இது சாத்தியம் என்று கேட்டு வருகிறார்கள். ஒரு பெண்ணுடன் திருமணம் செய்யாமல் குழந்தை பெற்ற சட்டிபாபு அவரை பிரிந்த நிலையில், இரண்டாவது பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்து வந்த நிலையில், முதல் மனைவி பற்றி அறிந்த இரண்டாவது மனைவி தான், விஷயம் தெரிந்து இரண்டு பேரும் சேர்ந்து வாழலாம் என்று முடிவு செய்திருக்கிறார். அதன்பிறகு 2 காதலிகளும் ஒற்றுமையாக சட்டிபாபுவை கல்யாணம் செய்திருக்கிறார்கள். இதனால் தான் சட்டிபாபு சினிமா பாணியில் இரண்டு பெண்களை காதலித்து கடைசியில் இரண்டு பெண்களையும் திருமணம் செய்திருக்கிறார். 90களில் பிறந்து இன்னமும் திருமணம் ஆகாமல் உள்ள சிலர் சட்டிபாபுவின் செயலால் கோபம் அடைந்திருக்கிறார்கள். அவரை சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகிறார்கள். வியாழக்கிழமை காலை திருமணம் நடைபெறவிருந்த நிலையில், திருமண அழைப்பிதழ் சர்ச்சையானதால் போலீஸ் கைது செய்வார்கள் என பயந்து போன 3 பேரும் நள்ளிரவில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். சட்டிபாபு திருமணம் செய்து கொண்ட புகைப்படத்தை பகிர்ந்த நெட்டிசன்கள், சட்டிபாபு, எப்படி இது சாத்தியம் என்று கேட்டு வருகிறார்கள். சினிமா பாணியில் இரண்டு பெண்களை காதலித்து கடைசியில் இரண்டு பெண்களையும் திருமணம் செய்திருக்கிறார். 90களில் பிறந்து இன்னமும் திருமணம் ஆகாமல் உள்ள சிலர் சட்டிபாபுவின் செயலால் கோபம் அடைந்திருக்கிறார்கள். அவரை சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications