"பிரியாணி ஏன் சூடா இல்லை.." 90 ஆண்டு பழமையான ஹைதராபாத் ஹோட்டலில் அடிதடி ரகளை.. அடுத்து நடந்த பகீர்
ஹைதராபாத்: புத்தாண்டு தினத்தில் ஹைதராபாத்தில் இருக்கும் பிரபல ஹோட்டலில் பிரியாணிக்காக மிக மோசமான மோதல் நடந்துள்ளது. இது குறித்த வீடியோ பகீர் கிளப்புவதாக இருக்கிறது.
இன்று நாம் அனைவரும் 2024 புத்தாண்டை வரவேற்றோம். இந்தியா உட்பட உலகெங்கும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியது. ஒவ்வொரு நபரும் ஒவ்வொரு வகையில் நள்ளிரவில் புத்தாண்டை வரவேற்றனர்.

அதேநேரம் புத்தாண்டு கொண்டாட்டத்தில் சில இடங்களில் அடிதடி சம்பவங்களும் நடக்கும். இதற்கிடையே புத்தாண்டு தினத்தன்று அப்படியொரு மிக மோசமான சம்பவம் தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் நடந்துள்ளது.
பழமையான ஹோட்டல்: ஹைதராபாத்தில் உள்ள பழமையான ஹோட்டல்களில் ஒன்று கிராண்ட் ஹோட்டல்.. இது 1935ஆம் ஆண்டு முதல் ஹைதராபாத்தில் உள்ள அபிட்ஸில் என்ற இடத்தில் இயங்கி வருகிறது. பழமையான இந்த உணவகத்தில் எப்போதும் கூட்டம் நிரம்பி வழியும். புத்தாண்டு தினத்திலும் அதே போலத் தான் கூட்டம் அதிகமாக இருந்தது.
அப்போது பிரியாணியைச் சூடாகப் பரிமாறவில்லை என்று கூறி சிலர் அங்கே பிரச்சினை செய்துள்ளனர். இந்த வாக்குவாதம் கைகலப்பாகவும் மாறியுள்ளது. ஒரு கட்டத்தில் வாடிக்கையாளர் ஒருவர் வெயிட்டரை தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது பணியாளர்களும் பதிலுக்கு வாடிக்கையாளர்களைத் தாக்கியுள்ளனர். இதனால் அங்கே பெரும் பரபர்புப ஏற்பட்டது.
அடிதடி: இதையடுத்து உடனடியாக இது குறித்து போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். போலீசார் வந்து பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளனர். இந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அதில் ஹோட்டல் நிர்வாக உறுப்பினர்கள் வாடிக்கையாளர்கள் மீது தடிகள் மற்றும் சேர்களை கொண்டு தாக்குவது தெளிவாகத் தெரிகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக 6 பேர் மீது ஹைதராபாத் போலீசார் இரண்டு எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். மேலும், இந்த விவகாரத்தில் ஹோட்டல் நிர்வாகம் மற்றும் வாடிக்கையாளர் என இரு தரப்பிற்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
என்ன நடந்தது: இது தொடர்பாக ஹைதராபாத் போலீஸ் துணை ஆணையர் கூறுகையில், "பிரியாணி சூடாக இல்லை என்று இந்த பிரச்சினை நடந்துள்ளது. முதலில் வாடிக்கையாளர் வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது திடீரென அந்த வாடிக்கையாளர் ஹோட்டல் ஊழியரைத் தாக்கியதே இந்த பிரச்சினைக்குக் காரணம்.. அதைத் தொடர்ந்து, மற்ற ஊழியர்கள் சேர்ந்து வாடிக்கையாளர்களைத் தாக்கத் தொடங்கியதால் பிரச்சினை மோசமானது" என்றார்.












Click it and Unblock the Notifications