ஷாக்கிங்... காட்டுக்குள்.. கூட்டு பலாத்காரம் என்று சொன்ன பெண்.. திடீர் தற்கொலை.. ஹைதராபாத்தில்!

ஹைதராபாத் பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தன்னை 5 பேர் காட்டுக்குள் கடத்தி சென்று பலாத்காரம் செய்ததாகவும், காட்டுக்குள் டிரஸ்ஸே இல்லாமல் நிர்வாணமாக தவித்து கிடந்த போது, மீட்கப்பட்டதாகவும் பொய் தகவல் சொன்னாரே, அந்த இளம்பெண் இப்போது தூக்கு போட்டுக் கொண்டாராம்.

தெலங்கானா ஹைதராபாத்தில் உள்ள தனியார் காலேஜில் படித்து வரும் மாணவி அவர்.. கடந்த பிப்ரவரி 11-ம் தேதி சாயங்காலம் காலேஜ் முடிந்ததும் வீட்டுக்கு வழக்கம்போல் ஆட்டோவில் சென்றுள்ளார். இவர் வீடு ஆர்எல்நகர் காலணியில் உள்ளது.

அப்போது, அதே ஆட்டோவில் இருந்த 6 பேர் கொண்ட கும்பல், ஊருக்கு ஒதுக்குப்புற பகுதியில் மாணவியை கடத்தி சென்று பலாத்காரம் செய்துள்ளது..

 பலாத்காரம்

பலாத்காரம்

காட்டுக்குள் இருந்து தப்பி வந்த அந்த பெண் வீட்டில் இதை பற்றி சொல்லும்போது, "ஆட்டோவில் இருந்து தன்னை 6 பேர் கொண்ட கும்பல் அடித்து காட்டுக்குள் இழுத்து சென்றதாகவும், டிரஸ் இல்லாமல் காட்டுக்குள்ளேயே தவித்தபோது, அந்த வழியாக சென்ற ஒரு பெண் இதை பார்த்துவிட்டு, தனக்கு உதவியதாகவும் கூறியிருந்தார்.

புகார்

புகார்

இதனால் அவருடைய பெற்றோர்கள் போலீஸில் புகார் தரவும் விசாரணை ஆரம்பமானது.. அப்போதுதான்,
100க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களின் காட்சிகளை சம்பவ நாளிலிருந்து கிட்டத்தட்ட 2 நாட்கள் போலீசார் ஆய்வு செய்தனர்.. அப்போதுதான், ஒரு கேமராவில், சம்பந்தப்பட்ட மாணவி, யம்னான்பேட்டில் ஆட்டோவிலிருந்து தானாக முன்வந்து இறங்கியதை போலீசார் கண்டுபிடித்தனர்.

பொய்

பொய்

இதற்கு பிறகு கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில், அந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என்பதும் தெரியவந்தது. காலேஜில் இருந்து வீட்டுக்கு வருவதற்கு லேட்டாகி விட்டதால், இப்படி ஒரு பொய்யை சொன்னது தெரியவந்தது.இந்த நிலையில், அந்த பெண் திடீரென தற்கொலை செய்துகொண்டுள்ளார்.. என்ன ஆனது என்று தெரியவில்லை.. விஷம் குடித்தாரா? அல்லது தூக்க மாத்திரை சாப்பிட்டாரா என்று தெரியவில்லை..

விசாரணை

விசாரணை

வீட்டில் மயக்கமாகி விழுந்து கிடந்துள்ளார்.. இதை அவரது பெற்றோர் பார்த்துவிட்டு, காட்கேசர் பகுதியிலுள்ள ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றுள்ளனர்.. ஆனால், அவர் உயிரிழந்துவிட்டார்.. ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும்போதே உயிரிழந்துவிட்டாரா? அல்லது சிகிச்சை நடந்தபோது உயிரிழந்தாரா என்பது உறுதியாக தெரியவில்லை.. இதுதொடர்பாக ஆஸ்பத்திரிக்கு போலீசார் விரைந்து சென்று விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+