ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

என் மகளின் ஆன்மா சாந்தி அடைந்துவிடும்.. போலீசுக்கு நன்றி.. ஹைதராபாத் மருத்துவரின் தந்தை கண்ணீர்!

ஹைதராபாத் என்கவுண்டர் காரணமாக என்னுடைய மகளின் ஆன்மா சாந்தி அடையும் என்று கொல்லப்பட்ட ஹைதராபாத் மருத்துவரின் தந்தை தற்போது பேட்டி அளித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    சுடுங்க சார் ..அவங்கள மகிழ்ச்சியை வெளிப்படுத்திய பள்ளி மாணவிகள் !

    ஹைதராபாத்: ஹைதராபாத் என்கவுண்டர் காரணமாக என்னுடைய மகளின் ஆன்மா சாந்தி அடையும் என்று கொல்லப்பட்ட ஹைதராபாத் மருத்துவரின் தந்தை தற்போது பேட்டி அளித்துள்ளார்.

    யாரும் எதிர்பார்க்காத வகையில் ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவர் பாலியல் வன்புணர்வு வழக்கில் குற்றவாளிகள் அனைவரும் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். குற்றவாளிகள் நான்கு பேரையும் போலீசார் என்கவுண்டர் செய்தனர்.

    முகமது ஆரிப் 26, ஜொள்ளு சிவா 20, ஜொள்ளு நவீன் 20, சிண்டகுண்டா சென்னைகேஷ்வலு 20 என நான்கு பேரும் இன்று என்கவுண்டர் செய்யப்பட்டனர். தெலுங்கானா போலீஸ் இவர்களை என்கவுண்டர் செய்தது. ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் வன்புணர்வு செய்யப்பட்டு கடந்த 27ம் தேதி புதன் கிழமை மாலை கொலை செய்யப்பட்டார்.

    அதிகாலை 3.30 மணிக்கு போலீஸ் நடத்திய ஆபரேஷன்.. 4 பேரும் நடு நெற்றியில் சுட்டு கொலை.. என்ன நடந்தது? அதிகாலை 3.30 மணிக்கு போலீஸ் நடத்திய ஆபரேஷன்.. 4 பேரும் நடு நெற்றியில் சுட்டு கொலை.. என்ன நடந்தது?

    பேட்டி அளித்தார்

    பேட்டி அளித்தார்

    இந்த என்கவுண்டர் தொடர்பாக கொல்லப்பட்ட ஹைதராபாத் மருத்துவரின் தந்தை தற்போது பேட்டி அளித்துள்ளார். அதில், 4 பேரின் என்கவுண்டர் நிம்மதி தருகிறது. அவர்களுக்கு சரியான தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. இப்போதுதான் என் மனம் நிம்மதி அடைகிறது.என் மகளின் ஆன்மா சாந்தி அடைந்துவிடும்.

    வேதனை

    என் மகள் அனுபவித்த வேதனைக்கு பதில் கிடைத்துள்ளது. இது மற்றவர்களுக்கும் சரியான உதாரணமாக இருக்கும். தெலுங்கானா போலீஸ் இதில் வேகமாக செயல்பட்டது. கமிஷ்னர் விசி சஜ்னார் மிகவும் துரிதமாக செயல்பட்டார்.

    மிக்க நன்றி

    மிக்க நன்றி

    போலீசுக்கு மிக்க நன்றி. இந்த கொலையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது மீடியாதான். அவர்கள்தான் இதை இந்தியா முழுக்க கொண்டு சென்றது. அவர்களுக்கு மிக்க நன்றி, என்று ஹைதராபாத் மருத்துவரின் தந்தை தற்போது பேட்டி அளித்துள்ளார்.

    புகார்

    புகார்

    முன்னதாக இந்த வழக்கில் போலீசார் சரியாக செயல்படவில்லை. போலீஸ் எங்கள் எப்ஐஆரை பதிவு செய்யவில்லை என்று ஹைதராபாத் மருத்துவரின் தந்தை புகார் வைத்து இருந்தார். இதனால் மூன்று போலீசார் அப்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Hyderabad Doctor Murder: Thanks for the Encounter, My daughter will rest in peace says Victim's father.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X