"கேசிஆர் vs காங்.!" தெலுங்கானாவில் அமைதியாக நடந்து முடிந்த வாக்குப்பதிவு! 70.60% வாக்குகள் பதிவு
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் 119 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி அமைதியான முறையில் நடைபெற்று முடிந்தது. மொத்தம் 70.60% வாக்குகள் பதிவாகியுள்ளது.
அடுத்தாண்டு லோக்சபா தேர்தல் நடைபெறும் நிலையில் அதற்கு அனைத்து கட்சிகளுமே ரெடியாக ஆரம்பித்துவிட்டனர். அந்த லோக்சபா தேர்தலுக்கு அரையிறுதியாக இப்போது நடக்கும் சட்டசபைத் தேர்தல் பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய நான்கு மாநிலங்களில் வாக்கெடுப்பு நடந்து முடிந்துவிட்டது. இன்று தெலுங்கானா மாநிலத்தில் மட்டும் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது.
தெலுங்கானா மாநிலத்தைப் பொறுத்தவரை அங்கே மொத்தம் 119 இடங்கள் இருக்கிறது. அங்கே எந்தவொரு கட்சியும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கக் குறைந்தது 60 இடங்களில் வெல்ல வேண்டும்.
இப்போது அங்கே பிஆர்எஸ் ஆளும் கட்சியாக இருக்கும் நிலையில், அக்கட்சியின் தலைவர் கேசிஆர் முதல்வராக இருக்கிறார். அங்கே பிஆர்எஸ் கட்சிக்கு எதிராகக் காங்கிரஸ் இறங்குகிறது. இது தவிர பாஜக, ஒவைசியின் மஜ்லீஸ் கட்சி ஆகியவை களத்தில் இருக்கிறது.
தெலுங்கானாவில் கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் கேசிஆரின் பிஆர்எஸ் கட்சியின் வசம் 88 இடங்களில் வென்றது. அதேநேரம் காங்கிரஸ் 19 இடங்களில் மட்டுமே வென்றிருந்தது. ஆனால், இந்த முறை காங்கிரஸ் அங்கே கடும் போட்டியைக் கொடுத்து வருகிறது.
தெலுங்கானா மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி, அமித் ஷா, பிரியங்கா காந்தி எனப் பல முக்கிய தலைவர்கள் பிரச்சாரம் செய்தனர். முதல்வர் கே.சி.ஆர், அவரது மகன் கே.டி.ராமராவ், மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.ரேவந்த் ரெட்டி, பாஜக மக்களவை உறுப்பினர்கள் பண்டி சஞ்சய் குமார், டி.அரவிந்த் உள்பட மொத்தம் 2,290 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர்.
தெலுங்கானா மாநிலத்தின் எதிர்காலத்தை இன்று களத்தில் இருக்கும் 3.2 கோடி பேர் தீர்மானிக்க உள்ளனர். மாநிலம் முழுக்க வாக்களிக்க 35,655 வாக்குப்பதிவு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. தொடர்ந்து விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடந்தது. வாக்களார்கள் ஆர்வத்துடன் வந்து தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர். மொத்தம் 119 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 70.60 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக அத்திப்பளி என்ற தொகுதியில் 79 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
-
ராகுல் காந்தி கடும் அதிருப்தி.. திமுக அழைத்தும் செவிசாய்க்காத காங்கிரஸ் மேலிடம்.. என்ன நடந்தது? -
டெல்லி பூதமும்.. அறிவாலயம் யுக்தியும்.. திமுகவின் ஸ்மார்ட் தேர்தல் அஸ்திரம்! பாஜக எதிர்பார்க்கலயே -
காங்கிரஸுக்கு வில்லன் காங்கிரஸ் தான்.. திடீரென டெல்லிக்கு ஓடிய கர்நாடக MLAக்கள்! பதறும் சித்தராமையா -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ்












Click it and Unblock the Notifications