Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"கேசிஆர் vs காங்.!" தெலுங்கானாவில் அமைதியாக நடந்து முடிந்த வாக்குப்பதிவு! 70.60% வாக்குகள் பதிவு

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் 119 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி அமைதியான முறையில் நடைபெற்று முடிந்தது. மொத்தம் 70.60% வாக்குகள் பதிவாகியுள்ளது.

அடுத்தாண்டு லோக்சபா தேர்தல் நடைபெறும் நிலையில் அதற்கு அனைத்து கட்சிகளுமே ரெடியாக ஆரம்பித்துவிட்டனர். அந்த லோக்சபா தேர்தலுக்கு அரையிறுதியாக இப்போது நடக்கும் சட்டசபைத் தேர்தல் பார்க்கப்படுகிறது.

Indias Youngest State Telangana goes for assembly election today

ஏற்கனவே ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய நான்கு மாநிலங்களில் வாக்கெடுப்பு நடந்து முடிந்துவிட்டது. இன்று தெலுங்கானா மாநிலத்தில் மட்டும் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது.

தெலுங்கானா மாநிலத்தைப் பொறுத்தவரை அங்கே மொத்தம் 119 இடங்கள் இருக்கிறது. அங்கே எந்தவொரு கட்சியும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கக் குறைந்தது 60 இடங்களில் வெல்ல வேண்டும்.

இப்போது அங்கே பிஆர்எஸ் ஆளும் கட்சியாக இருக்கும் நிலையில், அக்கட்சியின் தலைவர் கேசிஆர் முதல்வராக இருக்கிறார். அங்கே பிஆர்எஸ் கட்சிக்கு எதிராகக் காங்கிரஸ் இறங்குகிறது. இது தவிர பாஜக, ஒவைசியின் மஜ்லீஸ் கட்சி ஆகியவை களத்தில் இருக்கிறது.

தெலுங்கானாவில் கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் கேசிஆரின் பிஆர்எஸ் கட்சியின் வசம் 88 இடங்களில் வென்றது. அதேநேரம் காங்கிரஸ் 19 இடங்களில் மட்டுமே வென்றிருந்தது. ஆனால், இந்த முறை காங்கிரஸ் அங்கே கடும் போட்டியைக் கொடுத்து வருகிறது.

தெலுங்கானா மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி, அமித் ஷா, பிரியங்கா காந்தி எனப் பல முக்கிய தலைவர்கள் பிரச்சாரம் செய்தனர். முதல்வர் கே.சி.ஆர், அவரது மகன் கே.டி.ராமராவ், மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.ரேவந்த் ரெட்டி, பாஜக மக்களவை உறுப்பினர்கள் பண்டி சஞ்சய் குமார், டி.அரவிந்த் உள்பட மொத்தம் 2,290 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர்.

தெலுங்கானா மாநிலத்தின் எதிர்காலத்தை இன்று களத்தில் இருக்கும் 3.2 கோடி பேர் தீர்மானிக்க உள்ளனர். மாநிலம் முழுக்க வாக்களிக்க 35,655 வாக்குப்பதிவு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. தொடர்ந்து விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடந்தது. வாக்களார்கள் ஆர்வத்துடன் வந்து தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர். மொத்தம் 119 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 70.60 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக அத்திப்பளி என்ற தொகுதியில் 79 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+