அவர்தான் இனி மாநில தலைவர்களில் ஹீரோ.. ஜெகன் நிகழ்த்திய இந்த சாதனையை இனி யாரும் செய்ய முடியாது!
ஆந்திர பிரதேசத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி வெற்றிபெறுவதற்கு பின் பல முக்கிய காரணங்கள் இருக்கிறது.
Recommended Video
ஹைதரபாத்: ஆந்திர பிரதேசத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி வெற்றிபெறுவதற்கு பின் பல முக்கிய காரணங்கள் இருக்கிறது. அவரின் புதிய வாக்கு வங்கியை பார்த்தால் இந்திய அரசியலில் புதிய மாநில ஹீரோ உருவாகிவிட்டார் என்று நீங்களே சொல்வீர்கள்!
பொதுவாக ஆந்திர பிரதேச அரசியலில் ஜாதி வாக்குகள் அதிக முக்கியத்துவம் பெறும். தென்மாநிலங்களில் மற்ற இடங்களில் ஜாதி அரசியல் இருந்தாலும், ஆந்திர பிரதேசத்தில் வெட்ட வெளிச்சமாக அது தெரியும்.
ஆனால் அந்த ஜாதி அரசியலையும் கடந்து ஜெகன் மோகன் ரெட்டி இந்த தேர்தலில் சாதித்து இருக்கிறார். இதெல்லாம் நடக்க கூடிய விஷயமா என்று எல்லோரும் நினைத்த விஷயங்களை அவர் நிகழ்த்திக் காட்டி இருக்கிறார்.

வெற்றி என்ன
ஆந்திர பிரதேசத்தில் மொத்தம் 175 தொகுதிகளில் தேர்தல் நடந்தது. இந்நிலையில் அங்கு சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி வெறும் 22 இடங்களில் மட்டும் வென்று ஆட்சியை இழந்துள்ளது. அங்கு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி 151 இடங்களில் வென்றுள்ளது. அங்கு மெஜாரிட்டி பெற 88 இடங்களில் வெல்ல வேண்டும். இதனால் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி அம்மாநில முதல்வராகிறார்.

வாக்குகள் எப்படி
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி பக்கா ரெட்டி அரசியலை வைத்து வளர்ந்த கட்சி என்ற குற்றச்சாட்டு ஏற்கனவே இருக்கிறது. இதனால் இந்த தேர்தலில் ரெட்டிகளின் வாக்குகளையும் மற்ற சில உயர் சாதியினரின் வாக்குகளையும் மையமாக வைத்து அக்கட்சி போட்டியிடும். வெற்றிபெறும், ஆனாலும் பெரிய சாதனை எல்லாம் செய்யாது என்றே கணித்து இருந்தனர்.

சர்ஜிக்கல் ஸ்டிரைக்
ஆனால் நடந்தது அப்படி இல்லை. ஆந்திர பிரதேசத்தில் கிட்டத்தட்ட 90% ஜாதிகள் அனைத்தும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்துள்ளது. ஜெகன் மோகன் ரெட்டிக்கு ரெட்டியை சேர்ந்த மக்கள் மட்டுமில்லாமல் வேறு ஜாதியை சேர்ந்த மக்களும் வாக்குகளை வாரி இறைத்து இருக்கிறார்கள்.

புள்ளி விவரம்
பின் வரும் வாக்குகள் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஜாதி ரீதியாக பெற்ற வாக்குகள் ஆகும்.
உயர் ஜாதியினர் - 29% வாக்குகள்.
ரெட்டி - 86% வாக்குகள்.
கம்மா -34% வாக்குகள்.
காபு - 19% வாக்குகள்.
ஓபிசி - 41% வாக்குகள்.
எஸ்சி -64% வாக்குகள்.
எஸ்டி -86% வாக்குகள்.
முஸ்லீம் -49% வாக்குகள்.
மற்றவர்கள் -24 % வாக்குகள்.
மாற்றம்
தெலுங்கு தேசம்
பின் வரும் வாக்குகள் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி ஜாதி ரீதியாக பெற்ற வாக்குகள் ஆகும்.
உயர் ஜாதியினர் - 57% வாக்குகள்.
ரெட்டி - 8% வாக்குகள்.
கம்மா -61% வாக்குகள்.
காபு - 47% வாக்குகள்.
ஓபிசி - 46% வாக்குகள்.
எஸ்சி -31% வாக்குகள்.
எஸ்டி -14% வாக்குகள்.
முஸ்லீம் -46% வாக்குகள்.
மற்றவர்கள் -54 % வாக்குகள்.

இதுதான்
இந்த வாக்கு சதவிகிதம் மூலம் ஜாதி வாக்குக அரசியலை ஆந்திர பிரதேசத்தில் ஜெகன் மோகன் ரெட்டி உடைத்து இருக்கிறார் என்றுதான் கூறி வேண்டும் . எஸ்சி, எஸ்டி மக்கள் ஜாதியை தாண்டி அதிகமாக ஜெகனுக்கு வாக்களித்துள்ளனர். அதேபோல் சந்திரபாபுவிற்கு வாக்களிக்கும் கம்மா ஜாதி மக்களும் அதிகமாக இந்த ஜெகன் மோகன் ரெட்டிக்கு வாக்களித்து இருக்கிறார்கள்.

ஹீரோவாகிறார்
அதேபோல் விவசாயிகள், இளைஞர்களும் அதிகமாக ஜெகன் மோகன் ரெட்டிக்குத்தான் வாக்களித்து இருக்கிறார்கள். ஜெகன் நிகழ்த்திய இந்த சாதனையை அம்மாநிலத்தில் இனி யாரும் செய்ய முடியாது என்கிறார்கள். இதன் மூலம் அனைத்து தரப்பு மக்களுக்குமான தலைவராக ஜெகன் மாறி உள்ளார் என்று உறுதியாக கூற முடியும்.. இதற்கு முன் ஆந்திர அரசியலில் இப்படி அனைத்து தரப்பு மக்களுக்குமான தலைவர் ஒருவர் இருந்தார்.. அவர் வேறு யாருமில்லை ஜெகனின் தந்தை ராஜசேகர ரெட்டி!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications