Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிபிசி ஆவணப்படம் திரையிட முயற்சி! ஜாமியா மிலியாவை அடுத்து.. உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்களும் கைது

ஏற்கெனவே ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் ஆவணப்படத்தை திரையிட முயன்றபோது மாணவர்கள் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தெலங்கானாவின் ஹைதராபாத்தில் அமைந்துள்ள 'உஸ்மானியா' பல்கலைக்கழகத்தில் குஜராத் கலவரம் குறித்த பிபிசியின் ஆவணப்படத்தை திரையிட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 2002ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தையடுத்து நடந்த கலவரத்தில் சுமார் 2000க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இதே அளவில் மக்கள் படுகாயமடைந்தனர். ஏராளமான பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போது அம்மாநிலத்தின் முதலமைச்சராக தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி பதவி வகித்து வந்தார்.

இதனையடுத்து இந்த கலவரம் குறித்து இங்கிலாந்து செய்தி ஊடகமான பிபிசி இரண்டு பாகங்களை கொண்ட ஆவணப்படத்தை வெளியிட்டது. ஆனால் இந்த ஆவணப்படம் வெறுப்பு பிரசாரத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டதாக மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மட்டுமல்லாது இந்த படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிடக்கூடாது என்றும் பேஸ்புக், டிவிட்டர் மற்றும் யூடியூப் போன்ற நிறுவனங்களுக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது.

திரையிடல்

திரையிடல்

அதேபோல இந்நிறுவனங்கள் தங்கள் தளத்திலிருந்து இப்படத்தை நீக்கின. ஆனால், இந்த படம் பிரிட்டிஷ் வெளியுறவுத்துறையின் ஆவணங்களின்படிதான் எடுக்கப்பட்டுள்ளதாகவும் எனவே இதனை தடை செய்ய வேண்டிய அவசியமில்லை என்றும் எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன. இவ்வாறு ஆவணப்படங்களை முடக்குவது என்பது கருத்து சுதந்திரத்தை முடக்கும் செயல் என்றும் எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும், தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக இப்படத்தை பொது வெளியில் திரையிட்டு வருகின்றன. கேரளாவில் பல்வேறு கல்வி நிலையங்களிலும் இந்த படத்தை மாணவர்கள் திரையிட்டனர்.

தாக்குதல்

தாக்குதல்

இதனையடுத்து டெல்லி ஜேஎன்யு பல்கலைக்கழகத்திலும் இப்படம் திரையிட திட்டமிடப்பட்டது. ஆனால் இதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதி மறுத்தது. மட்டுமல்லாது தடையை மீறி இப்படம் திரையிடப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டது. ஆனால் இந்த எச்சரிக்கையை மீறி மாணவர் சங்கத்தினர் படத்தை திரையிட்டனர். ஆனால், இம்மாணவர்கள் மீது ஏபிவிபி மாணவர் அமைப்பினர் கற்களை வீசி தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்டது. அதேபோல அந்த குறிப்பிட்ட கட்டிடத்தில் மின்வெட்டும் ஏற்பட்டது.

போராட்டம்

போராட்டம்

அதேபோல, டெல்லியின் ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்திலும் இப்படத்தை திரையிட SFI மாணவர்கள் முடிவெடுத்தனர். ஆனால் அதற்கு முன்னதாகவே மாணவர் சங்கத்தினரை காவல்துறையினர் கைது செய்தனர். இது நாடு முழுவதும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த கைது நடவடிக்கையை கண்டித்து சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறுபுறம் இந்த திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் உள்ள பிபிசி தலைமை அலுவலகம் முன்பாக பாஜக ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கைது

கைது

இதனையடுத்து நேற்று தெலங்கானாவின் ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் இந்த ஆவணப்படத்தை திரையிட முயன்றனர். ஆனால் இதற்கு காவல்துறையினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதனை மீறி திரையிட முயன்ற நிலையில் மாணவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கைகலப்பு எழுந்துள்ளது. இதனையடுத்து மாணவர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+