பொருளாதாரத்தை விட விலைமதிப்பற்றது மனித உயிர்... ஊரடங்கை நீட்டிக்க கோரும் தெலுங்கானா முதல்வர்
ஹைதராபாத்: கொரோனா வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை இன்னும் 2 வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா வைரஸுக்கு உலக நாடுகள் முழுவதும் மருந்து கண்டுபிடிக்க முடியாமல் தவித்து வரும் நிலையில், அந்த கொடிய நோயின் தாக்கத்தில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் நோக்கில் இந்தியா உட்பட பல நாடுகளில் லாக்டவுன் கொண்டு வரப்பட்டுள்ளது. மார்ச் 24-ம் தேதி முதல் ஏப்ரல் 5-ம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ஊரடங்கை மேலும் நீடிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் இப்போது எழுந்துள்ளன.

இது தொடர்பாக பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்துள்ள தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், பொருளாதாரத்தை எப்போது வேண்டுமானாலும் மீட்டுவிடலாம் ஆனால் பிரிந்த உயிரை மீட்க முடியாது என்றும், மனித உயிர் விலைமதிப்பற்றது எனவும் தெரிவித்துள்ளார். கொரோனாவில் இருந்து பாதுகாத்துக்கொள்ள ஊரடங்கு ஒன்று தான் இப்போது இருக்கும் மிகச்சிறந்த ஆயுதம் என்றும், வேறுவழியில்லாததால் இதனை மக்கள் பொறுத்துக்கொண்டு வீடுகளில் இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
நாளை மறுதினம் நாடாளுமன்ற கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை நடத்த உள்ள நிலையில் தெலுங்கானா முதல்வர் இந்த கோரிக்கையை விடுத்திருக்கிறார். இதனால் சந்திரசேகர் ராவ் கூறியப்படி ஊரடங்கை மேலும் நீடிப்பது தொடர்பாக அந்த கூட்டத்தில் விவாதிக்க மிக அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவிலேயே முதல்முறையாக ஊரடங்கை தேசிய அளவில் மேலும் நீட்டிக்க வேண்டும் எனக் கூறியிருப்பவர் சந்திரசேகர் ராவ் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் சுகாதாரத்துறை உள்கட்டமைப்பு பலவீனமான முறையில் உள்ளதால் லாக்டவுன் மட்டுமே கொரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கான சிறந்த ஆயுதம் என கே.சி.ஆர்.சுட்டிக்காட்டியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications