நடுங்க வைத்த பெண்.. பேர்தான் "புஜ்ஜி".. கத்தியால் கழுத்தை அறுத்து.. அலறிய சூரியாபேட்டை.. இவரும் தாயா
6 மாத குழந்தையை நரபலி தந்துள்ளார் பெற்ற தாய்
ஹைதராபாத்: பிறந்த 6 மாசமே ஆன குழந்தையை நரபலி கொடுத்துள்ளார் பெற்ற தாய் புஜ்ஜி.. இந்த புஜ்ஜிக்கு தோஷம் இருக்கிறதாக ஜோசியக்காரர்கள் சொல்லி உள்ளனர்.. அதனால், தன்னுடைய 6 மாத குழந்தையை தானே, கத்தியால் கழுத்தை அறுத்து கொன்று விட்டார்.
தெலுங்கானா மாநிலம் சூரியா பேட்டையை சேர்ந்த கிருஷ்ணா... இவர் புஜ்ஜி என்பவரை 2வது கல்யாணம் செய்து கொண்டார்.. இவர்களுக்கு 6 மாதத்தில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் புஜ்ஜிக்கு நாக தோஷம் இருப்பது தெரியவந்துள்ளது.. இதையடுத்து, கிருஷ்ணாவையும், குழந்தையையும் தனியே தங்க வைத்திருந்தனர்..

நாகதோஷம்
இதனால் புஜ்ஜி மேலும் மனஉளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது... கடந்த 6 மாசமாகவே புஜ்ஜி தனிமையில் இருந்து வருகிறார்... எதையோ பறிகொடுத்ததுபோல, பித்து பிடித்தது போலவும் இருந்துள்ளார். இப்படிப்பட் சூழலில்தான், ஒரு ஜோசியக்காரர் புஜ்ஜியிடம், நாக தோஷத்தை போக்க வேண்டும் என்றால், 6 மாச குழந்தையை நரபலி கொடுக்க வேண்டும் என்று சொல்லி உள்ளார்.

நரபலி
இதைக்கேட்ட புஜ்ஜியும், குழந்தையை நரபலி தர தயாரானார்.. இதற்காகவே தினமும், சிவனை நினைத்து ராத்திரி நேரங்களில் வீட்டில் தனியே பூஜை செய்து வந்துள்ளார்... நேற்றைய தினம், தன்னுடைய ரூம் கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்ட புஜ்ஜி, சிவன் படத்திற்கு முன்பாக குழந்தையை கிடத்தினார்.. பிறகு ஒரு கத்தியை எடுத்து குழந்தையின் கழுத்தை அறுத்தார்.. குழந்தை அலறி அலறி துடித்து உயிரை விட்டது.. அந்த குழந்தையின் ரத்தத்தை எடுத்து சிவனுக்கு காணிக்கையாக படைத்துள்ளார் புஜ்ஜி.

புஜ்ஜி
குழந்தையின் மரண ஓலத்தை கேட்ட குடும்பத்தினரும், அக்கம் பக்கத்தினரும் பதறி கொண்டு ஓடிவந்தனர்.. கதவு உள்பக்கமாக பூட்டியிருந்ததால், கதவு தட்டியும் புஜ்ஜி திறக்கவில்லை.. பிறகு கதவை உடைத்து கொண்டு உள்ளே போனார்கள்.. குழந்தை சடலமாக இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்... உடனடியாக போலீசுக்கு தகவல் சொல்லவும், அவர்கள் விரைந்து வந்து புஜ்ஜியை கைது செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இளம்பெண்கள்
சமீபத்தில்தான், நன்கு படித்த குடும்பத்தை சேர்ந்த 2 இளம்பெண்கள் நரபலியாக உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் நிகழ்ந்தது.. அதேபோல, இதே ஆந்திராவில் பெற்ற தாயே வயதுக்கு வந்த 2 மகள்களை அடித்து கொன்று நரபலி தந்த சம்பவமும் நடந்தது.. இதே ஆந்திராவில்தான், ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் கொல்லப்பட்ட சம்பவம் நடந்தது..

நரபலி
இப்படி, மூடநம்பிக்கையால், நரபலி கொடுக்கும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது அதிர்ச்சியை தந்து வருகிறது.. எத்தனையோ தம்பதிகள், குழந்தைகள் இல்லாமல் அவதிப்பட்டு வரும் நிலையில், இப்படி ஒரு அநியாய சிசு கொலை அனைவரையும் அதிர வைத்தும் வருகிறது.
-
திருச்சியில் மாஸ்டர் பட வில்லன் பவானி பாணியில் ஸ்கெட்ச்.. திமுக கவுன்சிலர் வழக்கில் ட்விஸ்ட் -
ஒட்டன்சத்திரம் தளையூத்து அருவிக்கு வந்த 11 நண்பர்கள்! நீரில் மூழ்கி 4 பேர் பலியான சோகம்! -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து












Click it and Unblock the Notifications