தெலுங்கானா தமிழ்ச் சங்க மூன்றாம் ஆண்டு விழா.. களைக்கட்டிய ஹைதராபாத்.. கலக்கல் விழா

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தெலுங்கானா தமிழ்ச் சங்க மூன்றாம் ஆண்டு விழா, நன்னெறிச்சுடர் விருது வழங்கும் விழா ஐதராபாத்தில் கடந்த ஜனவரி 2ம் தேதி வெகு விமரிசையாக நடைபெற்றது.

Telangana Tamil Sangam third anniversary held in Hyderabad on January 2

இந்த விழாவைத் தெலுங்கானா தமிழ்ச் சங்கத்தின் தலைவர் எம்.கே.போஸ் தலைமை வகித்தார், துணைத் தலைவர் தருமசீலன், பொதுச்செயலாளர் ராஜ்குமார், பொருளாளர் நேரு சாஸ்திரி, துணைப் பொருளாளர் குமாரராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்ச் சங்க துணைத்தலைவர் தருமசீலன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். தலைவர் போஸ் தலைமை உரையாற்றினார்.

Telangana Tamil Sangam third anniversary held in Hyderabad on January 2

இந்த விழாவில் தமிழ்ச் சங்கத்தின் தமிழ் வகுப்பு மாணவர்களுக்கு நற்சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கப்பட்டன. ஆத்திசூடி ஒப்புவித்த சுமார் 25 மாணவர்களுக்குத் திருவையாறு ஒளவை கோட்டம் சார்பில் நன்னெறிச்சுடர் விருது வழங்கப்பட்டது.

Telangana Tamil Sangam third anniversary held in Hyderabad on January 2

தொடர்ந்து தமிழ் வகுப்புகளில் மாணவர்கள் அவ்வையார் வேடம் அணிந்து, ஆத்திசூடி ஒப்புவித்தல், திருக்குறள் ஒப்புவித்தல், பாரதியார் கவிதை வாசித்தல், இசை மீட்டல், கண் கவர் கலை நிகழ்ச்சிகள் என ஆண்டு விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

Telangana Tamil Sangam third anniversary held in Hyderabad on January 2

முன்னதாக ஆண்டு விழா விளையாட்டுப் போட்டிகளில் பங்குபெற்று முதல் மூன்று இடங்களை வென்ற சிறுவர்கள் இளைஞர்கள், பெண்கள் மற்றும் ஆண்களுக்கு நினைவு கேடயம் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது. சபையோருக்கான மனமகிழ் வினாடி வினாவில் தமிழ் சார்ந்த பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்த அனைவருக்கும் திருக்குறள் புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது.

Telangana Tamil Sangam third anniversary held in Hyderabad on January 2

விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் செல்வக்குமரன், அருணாதேவி, ஜெயலட்சுமி மற்றும் நிர்மலா ஆகியோருக்கு தமிழ்ச் சங்கத்தின் சார்பில் பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. நன்கொடையாளர்களும் ஆண்டு விழாவில் நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

Telangana Tamil Sangam third anniversary held in Hyderabad on January 2

இவ்விழாவில் ஏராளமான தமிழ் மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியை அருணா குமாரராஜன் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியின் இறுதியில் உறுப்பினர்கள் அனைவருக்கும் இரவு விருந்துடன் 2022 ஆம் ஆண்டிற்கான நாட்காட்டி வழங்கப்பட்டது. தெலுங்கானா தமிழ்ச் சங்கத்தின் பொதுச் செயலாளர் ராஜ்குமார் சிவாஜி நன்றியுரையாற்றினார். நிகழ்ச்சிக்கான விரிவான ஏற்பாடுகளை யுவராஜ், குணசேகர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

Telangana Tamil Sangam third anniversary held in Hyderabad on January 2
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+