இன்று தெலுங்கு மொழி தினம்.. ஆந்திரா, தெலுங்கானாவில் கொண்டாட்டம்! அறிஞர்களுக்கு மரியாதை
ஹைதராபாத்: உலகம் முழுவதும் தெலுங்கு பேசும் மக்கள் இன்று தெலுங்கு மொழி தினத்தை கொண்டாடி வருகின்றனர். முன்னதாக மான்கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி தெலுங்கு மொழி தினமாக கொண்டாடப்படும் என்று கூறியிருந்தார்.
உலகின் மிகவும் பழமையான மொழிகளில் தெலுங்கும் ஒன்று. 2,000 ஆண்டுகளுக்கும் மேல் வரலாறு கொண்ட இந்த மொழி தென்னிந்தியாவின் ஒன்றுபட்ட ஆந்திர மாநிலத்தின் ஆட்சிமொழியாகவும், மக்கள் மொழியாகவும் இருக்கிறது. இது தவிர தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களிலும் குறிப்பிட்ட சதவிகித மக்கள் தெலுங்கு மொழியை பேசுகின்றனர்.

இந்நிலையில் இன்று நாடு முழுவதும் தெலுங்கு பேசும் மக்கள், தெலுங்கு தினத்தை கொண்டாடி வருகின்றனர். முன்னதாக இது குறித்து 104-வது மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய இருந்த பிரதமர் நரேந்திர மோடி, "இந்தியாவின் மற்றொரு பெருமைமிக்க தாய்மொழி தெலுங்கு. ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி தெலுங்கு தினத்தை கொண்டாட உள்ளோம். இதற்காக இப்போதே தெலுங்கு தின வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். தெலுங்கு மொழியின் இலக்கியம், பாரம்பரியத்தில் இந்திய கலாச்சாரத்தின் பல விலைமதிப்பற்ற ரத்தினங்கள் மறைந்துள்ளன. தெலுங்கு மொழியின் பாரம்பரியத்தை நாடு முழுவதும் கொண்டு செல்ல பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என்று கூறியிருந்தார்.
இந்த நாளில் தெலுங்கு மொழியை வளர்ச்சிக்கு காரணமாக இருந்த அறிஞர்களை தெலுங்கு பேசும் மக்கள் நினைவு கூர்ந்துள்ளனர். ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானாவில் பள்ளி, கல்லூரிகளில் தெலுங்கு மொழியின் சிறப்பு குறித்து அறிந்துகொள்ளும் வகையில் சில நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதேபோல அரசியல் தலைவர்கள் தெலுங்கு மொழியின் அறிஞர்களுக்கு மரியாதை செலுத்த இருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications