10 பக்தர்கள் பலி.. நள்ளிரவில் மலை பள்ளத்தில் கவிழ்ந்த தனியார் பஸ்.. ஆந்திராவில் சோகம்
அமராவதி: ஆந்திராவில் தனியார் பஸ் ஒன்று மலைப்பாதையில் உள்ள பள்ளத்தில் இன்று அதிகாலையில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. பஸ்சில் 37 பேர் பயணித்த நிலையில் 10 பேர் பலியாகி உள்ளனர். மற்றவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆந்திர மாநிலம் சீதாராம ராஜூ மாவட்டம் சிந்தூரு - மரிதுமில்லி மலைப்பாதையில் இன்று அதிகாலையில் தனியாருக்கு சொந்தமான பஸ் சென்று கொண்டிருந்தது. திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

துலசிபக்கா அருகே 9வது மைல்ஸ்டோனில் உள்ள திருப்பத்தில் தடுப்பு சுவரை இடித்து பள்ளத்தில் பஸ் கவிழ்ந்தது.
இதுபற்றி தகவலறிந்தவுடன் போலீசார், தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மீட்டு பணியை தொடங்கினர்.
அப்போது 10 பேர் பலியானது தெரியவந்தது. மேலும் 27 பேர் காயமடைந்து இருந்தனர். இவர்களில் சிலர் படுகாயங்கள் அடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் சிந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சையில் உள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை இன்னம் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
முதற்கட்ட விசாரணையில் அவர்கள் பத்ராசலம் சென்றுவிட்டது அன்னவாரத்துக்கு பஸ்சில் சென்று கொண்டிருந்தனர். பஸ்சில் 35 பக்தர்கள், 2 டிரைவர்கள் இருந்தனர். நள்ளிரவில் அவர்கள் பயணித்த பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது தெரியவந்துள்ளது. இதுபற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications