ரபேல் விமானம் வாங்கியதில் ரூ.12,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.. காங்கிரஸ் பரபரப்பு குற்றச்சாட்டு
ரபேல் விமானம் வாங்கியதில் மொத்தமாக ரூ.12,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று காங்கிரஸ் பரபரப்பு குற்றச்சாட்டு வைத்து இருக்கிறது.
Recommended Video
டெல்லி: ரபேல் விமானம் வாங்கியதில் மொத்தமாக ரூ.12,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று காங்கிரஸ் பரபரப்பு குற்றச்சாட்டு வைத்து இருக்கிறது.
காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போதே இந்த விமானம் வாங்க பிரான்ஸ் நிறுவனத்திடம் ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனாலும் எல்லாப் பேச்சு வார்த்தையும் முடிந்தும் ஒப்பந்தம் மட்டும் கையெழுத்தாகாமல் இருந்தது. கிட்டத்தட்ட 4 வருடங்கள் இந்த ஒப்பந்தம் இழுத்தடிக்கப்பட்டு இப்போதுதான் வெற்றிகரமாகக் கையெழுத்து ஆனது.
இந்த நிலையில் ரபேல் விமானம் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளது என்று ராகுல் காந்தி குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார். பாஜக கட்சி இதில் உண்மைகளை மறைப்பதாக அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
குலாம் நபி ஆசாத் குற்றச்சாட்டு
தற்போது இதுகுறித்து குலாம் நபி ஆசாத் குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார். அவர் சரியாக அனைத்து புள்ளி விவரங்களையும் வெளியிட்டு இருக்கிறார். ஏற்கனவே இது ராணுவ ரகசியம், இதில் பதிலளிக்க முடியாது என்று பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்து இருந்தார்.
நிறைய விலைக்கு வாங்கி இருக்கிறார்கள்
பாஜக பிரான்ஸ் ஒப்பந்தத்தில் ஒரு விமானம் ரூ.1,670.70 கோடிக்கு வாங்கப்பட்டு இருக்கிறது. ஆனால் சில மாதங்களுக்கு முன்பு எகிப்த், கத்தாருக்கு விற்கப்பட்ட போது இதே விமானம் ரூ.1,319.80 கோடிக்கு விற்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக ஒரு விமானத்திற்கு ரூ.351 கோடி இழப்பு ஏற்பட்டு இருக்கிறது.
நஷ்டம்
மொத்தமாக 36 விமானம் வாங்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக மொத்தம் 12,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு இருக்கிறது என்று கூறியுள்ளார்கள். வேண்டுமென்று நாட்டின் பொருளாதாரத்தை கருத்தில் கொள்ளாமல் அதிக விலைக்கு வாங்கி இருக்கிறார்கள் என்று குலாம் நபி ஆசாத் குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார்.
குறைவான விமானம்
மேலும் காங்கிரஸ் ஆட்சியின் போது 126 விமானங்களுக்கு ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் இப்போது 36 விமானங்கள் மட்டுமே வாங்கப்பட்டு இருக்கிறது. காங்கிரஸ் கூறிய விலைக்கு வாங்கி இருந்தால் மொத்தமாக ரூ 41,212 கோடிக்கு அனைத்து விமானங்களை வாங்கி இருக்கலாம். ஆனால் இப்போது 36 விமானங்களை வாங்கவே 12,000 கோடி இழப்பு ஏற்பட்டு இருக்கிறது என்றுள்ளார்.