12 மாநிலங்களில் செயல்படும் உணவுப் பாதுகாப்பு சட்டம் – அமைச்சர் பஸ்வான் தகவல்
பாட்னா: இந்தியாவில் 12 மாநிலங்களில் மட்டும்தான் உணவு பாதுகாப்புச் சட்டம் அமல்படுத்தபட்டிருக்கிறது என மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார்.
பாட்னாவில் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த போது அவர், "உணவு பாதுகாப்புச் சட்டத்தை சத்தீஸ்கர், அரியானா, மகாராஷ்டிரம், ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்கள் முழுமையாகவும், பீகார், டில்லி, இமாச்சலப் பிரதேசம், கர்நாடகம், சண்டிகர் உள்பட 7 மாநிலங்கள் பகுதி வாரியாகவும் அமல்படுத்தி இருக்கின்றன" என்றார்.

மற்ற மாநிலங்களில் இந்த சட்டம் இருந்தாலும்,அமல் படுத்தப்பட சரியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.விரைவில் மற்ற மாநிலங்களிலும் இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், பீகாரில் 1.58 கோடி குடும்பங்கள் இந்த உணவுப் பாதுகாப்பு சட்டத்தால் பயன் பெற்று வருகின்றன என்றும் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications