மாணவியை வைத்த கண் வாங்காமல் பார்த்ததாகக் கூறி 13 வயது மாணவனை கொன்ற சக மாணவர்கள்

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிராவில் ஒரு மாணவியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருந்ததற்காக 7ம் வகுப்பு மாணவன் பள்ளி வளாகத்தில் சக மாணவர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜாபூரில் இருக்கும் நூதன் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தவர் கிரண் கோரக்ஷ் சோனாவானே(13). அவர் பள்ளியில் ஒரு மாணவியை பார்த்துக் கொண்டே இருப்பதாகக் கூறி சக மாணவர்கள் சிலர் கடந்த மாதம் 26ம் தேதி அவரின் தலையை முதலில் பெஞ்சிலும் பிறகு மரத்திலும் வேகமாக மோதியுள்ளனர்.

13-Year-Old Killed Allegedly by School Mates for Staring at Girl

இதில் படுகாயம் அடைந்த கிரண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் கடந்த 1ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கிரண் பற்றி அவரது தாய் கூறுகையில்,

என் மகனை பழிவாங்க அவனை கொலை செய்துள்ளனர். என் மகன் எந்த மாணவியையும் வைத்த காண் வாங்காமல் பார்க்கவில்லை. பள்ளியில் படிக்கும் மாணவிகள் அனைவரும் தனது சகோதரிகள் போன்று என் மகன் என்னிடம் கூறுவான் என்றார்.

முன்னதாக கடந்த 1ம் தேதி ஜல்காவ்ன் மாவட்டம் கிரதில் உள்ள ஜவஹர் வித்யாலயாவில் கிஷோர் ரகு சவான்(11) என்ற 5வது வகுப்பு மாணவர் பள்ளி வளாகத்தில் சக மாணவர்களால் தாக்கப்பட்டதில் படுகாயம் அடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+