எல்லை தாக்குதலுக்கு செம பதிலடி கொடுத்த இந்திய ராணுவம்- 15 பாக். வீரர்கள் பலி!!
ஜம்மு காஷ்மீர் எல்லையில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்துள்ளது. இந்திய ராணுவ தாக்குதலில் 15 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் எல்லையில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் பாகிஸ்தானுக்கு ராணுவம் தக்க பதிலடியைக் கொடுத்துள்ளது. இந்திய ராணுவம் நடத்திய பதிலடி தாக்குதலில் 15 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜம்மு காஷ்மீர் எல்லையில் கடந்த சில நாட்களாக பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் 2 இந்திய வீரர்கள், எல்லை கிராமத்தைச் சேர்ந்த சிறுமி உயிரிழந்தனர்.

பாகிஸ்தானின் கண்மூடித்தனமான தாக்குதலால் எல்லையோர கிராம மக்கள் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு எல்லை பாதுகாப்புப் படையினர் இன்று பதிலடி கொடுத்தனர்.
இந்த பதிலடியில் பாகிஸ்தானின் 15 ராணுவ வீரர்கள் உயிரிழந்திருக்கலாம் என எல்லைப் பாதுகாப்பு படை அதிகாரி அருண்குமார் தெரிவித்துள்ளார். மேலும் பாகிஸ்தான் முதலில் தாக்குதல் நடத்தியதால் நாம் திருப்பி பதிலடி கொடுக்க நேரிட்டது; பாகிஸ்தானைப் போல பொதுமக்களை இலக்கு வைத்து நாம் தாக்குதல் நடத்தவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
ஐஎஸ்ஐ தீவிரவாதிகளின் புது சதி.. இந்திய அரசியலுக்குள் ஊடுருவ திட்டம்.. அதிர வைக்கும் பயங்கர பிளான்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications