For Daily Alerts
Just In
செய்தித் துளிகள்..
- மாலுமிகளின் ஜாமீன் காலத்தை நீட்டிக்க உச்சநீதிமன்றத்தை மறுத்ததால் இந்தியாவுக்கான தூதரை திரும்பப் பெறப் போவதாக இத்தாலி மிரட்டல்
- இந்திய முஸ்லிம்களின் வழித்தோன்றல்கள் ஹிந்துக்களே என்று விஸ்வ ஹிந்து பரிசத் இயக்கத்தின் தலைவர் பிரவீன் தொகாடியா கூறியுள்ளார். குஜராத்தின் பாவ்நகரில் நடைபெற்ற விஸ்வ ஹிந்து பரிஷத்தின் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சியில் பேசுகையில் தொகாடியா இவ்வாறு கூறினார்.
- ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையாளரை தமது அனுமதியின்றி மத்திய அரசு நியமிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.
- ஹமாஸ் தீவிரவாத இயக்கத்தின் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீக்கியுள்ளது
- ஆப்கான் வங்கியில் தற்கொலைப்படைத் தாக்குதல். அந்நாட்டு படையினர் தீவிரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர்.
- சிம்லாவில் பேருந்து விபத்துக்குள்ளானதில் 35 பேர் படுகாயமடைந்தனர்.
- பாகிஸ்தான் - சீனா இடையேயான அணுசக்தி ஒப்பந்தம் கவலை தருவதாக லோக்சபாவில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கவலை தெரிவித்தார்.
- பாஜகவின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில், சில அமைச்சர்கள் லட்சுமண ரேகையை மீறக் கூடாது என்று பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்தது ராஜ்யசபாவில் சர்ச்சையை எழுப்பியது. அமைச்சர்கள் தவறு செய்தால் அது குறித்து நாடாளுமன்றத்தில் தெரிவிக்க வேண்டியது பிரதமர் மோடியின் கடமை என்று கூறி எம்.பிக்கள் வலியுறுத்தினர்.
- இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவின் குடும்பத்தினர் பங்குதாரராக இருக்கும் 'லைக்கா மொபைல் நிறுவனம் சென்னையில் மிகப் பெரிய மருத்துவப் பரிசோதனை மையத்தை (டயக்னோஸ்டிக் சென்ட்டர்) அமைக்கப்போவதாக சென்னைக்கான இங்கிலாந்து துணைத் தூதர் பரத் ஜோஷி செய்தியாளர்களிடம் இன்று தெரிவித்தார்.
- இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலி எண்ணிக்கை 79ஆக உயர்ந்துள்ளது.
- உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றும் ஐ.பி.எல். பிக்ஸிங் வழக்கில் வாதங்கள் அனைத்தும் நிறைவடைந்துள்ளன. இந்த வழக்கில் அடுத்த உத்தரவு ஜனவரி மாதம் பிறப்பிக்கப்பட இருக்கிறது.
- முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாளான டிசம்பர் 25-ந் தேதியை நல்லாட்சி தினமாக அதிகாரப்பூர்வமாக நாடாளுமன்றத்தில் அறிவித்தார் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு.
- இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை மீட்க வலியுறுத்தி ராமநாதபுரம், நாகப்பட்டினம், காரைக்கால், புதுக்கோட்டை மீனவர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
- ஹைதராபாத்தில் பறவைக் காய்ச்சலுக்கு இருவர் பலியாகி உள்ளனர்.
Comments
English summary
Here are latest news updates:
Story first published: Wednesday, December 17, 2014, 18:45 [IST]