ஜம்மு காஷ்மீரில் 2 ராணுவ வீரர்களை கடத்திய தீவிரவாதிகள்.. தப்பி வந்த வீரர்! மற்றொருவரை மீட்க தீவிரம்!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் வனப்பகுதியில் நனது இந்திய ராணுவ வீரரை தீவிரவாதிகள் கடத்தியதால் பரபரப்பு நிலவி வருகிறது. இரண்டு இந்திய வீரர்கள் கடத்தப்பட்ட நிலையில் ஒருவர் தீவிரவாதிகளின் பிடியில் இருந்து தப்பி வந்தார். தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட மற்றொரு வீரரை பாதுகாப்புப் படையினர் தேடி வருகின்றனர்.
ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 2 இந்திய எல்லைப் பாதுகாப்பு படை வீரர்களை தீவிரவாதிகள் கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது. அனந்தநாக் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த 2 இராணுவ வீரர்கள் கடத்தப்பட்டுள்ளனர். அனந்தநாக் வனப்பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள், இராணுவ வீரர்களை கடத்தியதாக தெரியவந்துள்ளது.

கடத்திச் செல்லப்பட்ட எல்லைப் பாதுகாப்பு படை வீரர்களில் ஒருவர் போராடி தப்பி வந்துள்ளார். மற்றொருவரை போலீசார் மற்றும் இராணுவத்தினர் தேடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications