Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கண்ணை மறைத்த குடிபோதை.. ஓடும் ரயிலில் பெண்ணுக்கு தொல்லை.. அத்துமீறிய 2 காங்கிரஸ் எம்எல்ஏக்கள்

Subscribe to Oneindia Tamil

போபால்: மத்திய பிரதேசத்தில் ஓடும் ரயிலில் குழந்தையுடன் வந்திருந்த பெண்ணிடம் 2 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அத்துமீறி நடந்து கொண்டது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க மத்திய-மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இருப்பினும் ஆங்காங்கே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் தான் மத்திய பிரதேசத்தில் ஓடும் ரயிலில் பெண்ணிடம் 2 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தவறாக நடக்க முயன்ற சம்பவம் நடந்துள்ளது. அதுபற்றிய விபரம் வருமாறு:

 எம்எல்ஏக்களின் ரயில் பயணம்

எம்எல்ஏக்களின் ரயில் பயணம்

மத்திய பிரதேச மாநிலம் கோட்மா சட்டசபை தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் சுனில் சராப். இதேபோல் சாத்னா சட்டசபை தொகுதி எம்எல்ஏவாக உள்ளவர் சித்தார்த் குஷ்வாகா. இவர்கள் 2 பேரும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். இந்நிலையில் நேற்று எம்எல்ஏக்களான சுனில் சராப் மற்றும் சித்தார்த் குஷ்வாகா ஆகியோர் ரெவான்சால் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தனர். இருவரும் ஏசி கோச்சில் பயணம் செய்தனர்.

ஓடும் ரயிலில் பெண்ணுக்கு தொல்லை

ஓடும் ரயிலில் பெண்ணுக்கு தொல்லை

இந்த வேளையில் ரயிலில் பெண் ஒருவர் தனது குழந்தையுடன் அந்த கோச்சில் பயணம் செய்தார். அப்போது எம்எல்ஏக்களான சுனில் சராப், சித்தார்த் குஷ்வாகா ஆகியோர் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. மேலும் அவருக்கு தொல்லை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த பெண் செய்வதறியாது திகைத்தார்.

கணவரிடம் புகார் சொன்ன பெண்

கணவரிடம் புகார் சொன்ன பெண்

மேலும் அவர் தனது கணவருக்கு போன் செய்து சம்பவம் பற்றி தெரிவித்தார். இதையடுத்து பெண்ணின் கணவர் சம்பவம் குறித்து ரயில்வே நிர்வாகம் மற்றும் மத்திய ரயில்வே அமைச்சரை டேக் செய்து ட்விட்டரில் புகார் செய்தார். இந்த புகாரின் அடிப்படையில் உடனடியாக போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் இந்திய தண்டனை சட்டம் 354 என்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

குடிபோதையில்...

குடிபோதையில்...

மேலும் உடனடியாக அந்த பெண்ணுக்கு வேறு இருக்கை மாற்றி கொடுக்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில் எம்எல்ஏக்கள் இருவரும் குடிபோதையில் கர்னி ரயில் நிலையத்தில் இருந்து ரயிலில் ஏறியது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+