மோடி, பிரணாபுக்கு யோகா கற்றுக் கொடுக்க விரும்பும் 2 முஸ்லீம் சிறுமிகள்

Subscribe to Oneindia Tamil

பாட்னா: பீகாரைச் சேர்ந்த 2 முஸ்லீம் சிறுமிகள் பிரதமர் நரேந்திர மோடிக்கு யோகா கற்றுக் கொடுக்க விரும்புகிறார்கள்.

பீகார் மாநிலம் மேற்கு சம்பரன் மாவட்டத்தில் உள்ள லால் சரையா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ரேஷ்மா காத்தூன்(16), பிஸ்மில்லா காத்தூன்(14). பதின்வயதில் இருக்கும் அவர்கள் இருவரும் யோகா குருக்களாகும். அவர்கள் யோகா குருக்களாக இருப்பதை அறிந்த மத்திய அரசு சர்வதேச யோகா தினமான இன்று பாட்னாவில் உள்ள மொய்னுல் ஹக் ஸ்டேடியத்தில் நடந்த யோகா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிறருக்கு யோகா கற்றுக் கொடுக்குமாறு கூறியது.

2 Muslim girls from Bihar want to teach yoga to PM Modi

அவர்கள் பாஜக தலைவர் அமித் ஷா மற்றும் சில மத்திய அமைச்சர்களுக்கு யோகா கற்றுக் கொடுக்க உள்ளனர். இந்நிலையில் ரேஷ்மாவுக்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு யோகா கற்றுக் கொடுக்கும் ஆசை வந்துள்ளது.

பிஸ்மில்லா கூறுகையில்,

எனக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு யோகா கற்றுக் கொடுக்க ஆசையாக உள்ளது. அவர் டெல்லியில் பெரிய மாளிகையில் வசிக்கிறார். யோகா அவர் உடல் நலத்திற்கு நல்லது என்றார்.

ரேஷ்மா 2012ம் ஆண்டில் இருந்தும், பிஸ்மில்லா 2010ம் ஆண்டில் இருந்தும் யோகா செய்து வருகிறார்கள். அவர்களின் குடும்பத்தார் 1971ம் ஆண்டு நடந்த கிழக்கு பாகிஸ்தான் போரின்போது பீகார் வந்து பெங்காளி அகதிகள் காலனியில் வசித்து வருகின்றனர். அந்த காலனியில் வசிக்கும் அனைவரும் யோகா செய்து வருகிறார்கள்.

காலனியில் உள்ள அசோக் சர்கார் என்பவர் தான் அனைவருக்கும் யோகா கற்றுக் கொடுத்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+