ஆந்திரா என்கவுன்ட்டர்: போலீஸாரிடமிருந்து தப்பி ஓடிய தமிழர்களின் கதி என்ன?
சித்தூர்: ஆந்திராவில் செம்மரம் வெட்டியதாகக் கூறி போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 20 பேர் பலியாகியுள்ளனர், பலர் தப்பியோடிவிட்டனர். பலியானவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள்.
ஆந்திராவில் தமிழகத்தைச் சேர்ந்த பலர் செம்மரம் வெட்டி கடத்தி வருவதாக அம்மாநில போலீசார் குற்றம் சாட்டி வருகிறார்கள். இது தொடர்பாக இதுவரை பல தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள சந்திகிரி பகுதியில் இன்று அதிகாலை போலீசார் வனத்துறை அதிகாரிகளின் உதவியுடன் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது செம்மரக் கடத்தலில் ஈடுபட்டோர் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு போலீசாரும் சுட்டனர். இந்த துப்பாக்கிச்சூடு சுமார் ஒரு மணிநேரம் நடைபெற்றுள்ளது.
இதில் 20 செம்மரக் கடத்தல்காரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். 8 பேர் காயம் அடைந்துள்ளனர். மேலும் பலர் தப்பியோடிவிட்டனர். போலீஸ் தரப்பில் இரண்டு பேர் படுகாயம் அடைந்துள்ளனர். பலியானவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள். பலியான 20 பேரில் இரண்டு பேர் சர்வதேச கடத்தல்காரர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
துப்பாக்கிச்சூடு நடந்தபோது சந்திகிரி பகுதியில் 80 கடத்தல்காரர்கள் இருந்துள்ளனர். சித்தூர் மற்றும் நெல்லூர் வனபப்பகுதிகளில் செம்மரம் கடத்துவதை தடுத்து நிறுத்த சிறப்பு குழுக்கள் அண்மையில் தான் அமைக்கப்பட்டுள்ளன.
ஆந்திராவில் செம்மரம் வெட்டுபவர்களில் பெரும்பாலானோர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து?












Click it and Unblock the Notifications