For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

40 வயது பெண் திருமணம் செய்ய மறுத்ததால் 23 வயது வாலிபர் தற்கொலை!

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் மொபைல் நிறுவனத்தில் கணக்காளராக வேலை பார்த்து வந்த 23 வயது இளைஞர், தன்னைத் திருமணம் செய்து கொள்ள 40 வயதுப் பெண் மறுத்து விட்டதால் வருத்தமடைந்து ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

அவரது பெயர் கெளஷல் ஜா. இவர் நிஜாமுதீன் பகுதியில் உள்ள ரயில் நிலையத்தில் பிணமாகக் கிடந்தார். அவர் ரயில் முன்பு பாய்ந்தது தெரிய வந்தது. அவரது வீட்டில் போலீஸார் சோதனை நடத்தியபோது ஒரு கடிதம் கிடைத்தது. அதை ஜாதான் எழுதியிருந்தார்.

அதில் தான் 40 வயது நிரம்பிய ஒரு பெண்ண மனதாரக் காதலித்ததாகவும், ஆனால் அவர் தன்னைத் திருமணம் செய்து கொள்ள மறுத்து விட்டதாகவும், தனது சாவுக்கு அவரும், அவரது குடும்பத்தினரும்தான் காரணம் என்றும் எழுதி வைத்திருந்தார்.

கடிதத்தில் ஜாவின் கையெழுத்து இல்லை. எனவே இந்தக் கடிதம் அவர் எழுதியதுதானா என்பது குறித்துப் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

English summary

 A 23 yr old Delhi youth committed suicide after a 40 year old woman refused to marry him.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X