மும்பையில் மருத்துவர்களுக்கு பரவும் காசநோய்
Subscribe to Oneindia Tamil
மும்பை: மும்பையில் மருத்துவர்களுக்கு ஒருவித காசநோய் பரவி வருவது பீதியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் உள்ள பிஒய்எல் நாயர் மருத்துவமனையில் பணியாற்றும் 26 வயது ஆன மருத்துவருக்கு காச நோய் இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டு அவர் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காச நோயாளிகளுக்கு ஆலோசனை அளிப்பதும், சேவ்ரி காசநோய் மருத்துவமனைக்கு இந்த மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் சென்று மன நலம் தொடர்பாக ஆலோசனை அளிப்பதும் வழக்கம். அதனடிப்படையிலேயே இந்த மருத்துவருக்கு காசநோய் பரவியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இவரைத் தொடர்ந்து 25 மருத்துவர்களுக்கு காசநோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பது. இதில் 15 பேர் சியோன் மருத்துவமனையைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வழக்கமாக நோயாளிகளுக்குஉரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications