2ஜி முறைகேட்டில் முக்கிய சதிகாரர் ஆ.ராசாதான்: சிபிஐ
டெல்லி: 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய தொலைத் தொடர்பு அமைச்சர் ஆ.ராசாதான் முக்கிய சதிகாரர் என சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது.
2ஜி அலைக்கற்றை முறைகேடு தொடர்பாக சிறப்பு நீதிமன்றத்தில் இறுதித் தரப்பு வாதங்களை சிறப்பு அரசுதரப்பு வழக்கறிஞர் ஆனந்த் குரோவர் எடுத்துரைத்தார். அதில், ‘தொடக்கத்திலிருந்தே குற்றம்சாட்டப்பட்ட நிறுவனங்களுக்கு சார்பாகவே ஆ.ராசா செயல்பட் டதாகவும், அலைக்கற்றை உரிமங்களை இந்த நிறுவனங்களுக்கு வழங்க அனைத்து வகையான தந்திரோபாயங்களும் திட்டமிடப்பட்டவையே' என்றார் ஆனந்த் குரோவர்.

மேலும், ‘குற்றம்சாட்டப்பட்ட நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்பட முதலில் விண்ணப்பங்கள் வரவேற்கும் கடைசி தேதியை அக்டோபர் 10, 2007 என்பதிலிருந்து அக்டோபர் 1, 2007 என்று மாற்றினார். இதன் மூலம் 575 விண்ணப்ப நிறுவனங்களில் 408 நிறுவனங்கள் போட்டியில் இல்லாமல் பார்த்துக் கொள்ளப்பட்டது" என சிபிஐ நீதிபதி ஓ.பி.சைனியின் முன்னிலையில் தெரிவித்தார் குரோவர்.
இந்த விவகாரத்தில் அப்போதைய பிரதமரின் கவலைகளைத் தணிக்கும் விதமாக அவருக்கு எழுதிய கடிதத்தில் ஏற்கெனவே இருக்கும் நடைமுறையான முதல் விண்ணப்பம், முதல் சேவை அடிப்படையிலேயே உரிமங்கள் வழங்கப்படுவதாகவும் இதற்கு சொலிசிட்டர் ஜெனரல் மற்றும் அப்போதைய வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோரின் ஒப்புதல்களை பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார், ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. இதனையடுத்து சொலிசிட்டர் ஜெனரலின் ஒப்புதல் பெற்றதான அவரது வரைவு செய்தியாளர்களுக்கான அறிக்கையும் போலியாக தயாரிக்கப்பட்டதே என அவர் வாதிட்டார்.
இதேபோல், நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்களை பெற 4 கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டன, இதில் முன்னாள் தொலைத்தொடர்பு செயலர் சித்தார்த் பெஹூரா, மற்றும் ஆ.ராசாவின் தனிப்பட்ட செயலர் ஆர்.கே.சந்தோலியா ஆகியோர் தயாரித்த ஸ்லிப் ஒன்றின் அடிப்படையிலேயே விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
4 கவுண்ட்டர்களின் அமைப்புகளும் குற்றம்சாட்டப்பட்ட நிறுவனங்களுக்கு நியாயமற்ற முறையில் சாதகம் வழங்குவதற்கான முறையில் அமைந்திருந்தது. யார் வரிசையில் உள்ளனர், எந்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்பதை முன் கூட்டியே அறிந்திருந்தனர்' என குரோவர் வாதிட்டார்.
இந்த வழக்குத் தொடர்பாக செப்டம்பர் 10-ம் தேதி மேலும் வாதங்கள் தொடர்கிறது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications