ஸ்பெக்ட்ரம் வழக்கில் ப.சிதம்பரத்தை சேர்க்கக் கோரி சு.சுவாமி மனு- சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி!
டெல்லி: ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் வழக்கில் ப. சிதம்பரத்தின் தொடர்பு குறித்து விசாரிக்கக் கோரி சுப்ரமணியன் சுவாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்துள்ளது.
2008-ல் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தவர் ஆ. ராசா. அவர் விதிகளை மீறி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு என்பது புகார்

ப.சி.க்கும் தொடர்பு -சுவாமி
அப்போது நிதியமைச்சராக இருந்த ப. சிதம்பரம் இதற்கு துணைபோனதாகவும் கூறி சுப்ரமணியன் சுவாமி விசாரணை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் விசாரணை நீதிமன்றம் இம்மனுவை தள்ளுபடி செய்தது.

சுப்ரீம் கோர்ட்டில் மறுபரிசீலனை மனு
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சுப்ரமணியன் சுவாமி மறுபரிசீலனை மனுத்தாக்கல் செய்தார். அதையும் டிசம்பர் 11-ந் தேதி உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மேல்முறையீட்டு மனு
இதைத் தொடர்ந்து மேல்முறையீட்டு மனு ஒன்றையும் உச்சநீதிமன்றத்தில் சுப்ரமணியன் சுவாமி தாக்கல் செய்தார்.

தலைமை நீதிபதி பெஞ்ச் விசாரணை
இம்மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான பெஞ்ச் நேற்று விசாரித்தது.

மனு தள்ளுபடி
அப்போது, ஏற்கனவே உச்சநீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்த மனுவை அனுமதிக்க கூடிய சாத்தியக்கூறுகள் இல்லை என்று கூறிய நீதிபதிகள் சுப்ரமணியன் சுவாமியின் மேல்முறையீட்டு மனுவை நிராகரித்து உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications