For Quick Alerts
For Daily Alerts
Just In
காஷ்மீரில் விடிய விடிய நடந்த மோதலில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் ஹந்த்வாரா பகுதியில் நடந்த மோதலில் 3 தீவிரவாதிகளை ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர்.
ஜசல்தரா கிராமத்தில் நேற்று மாலை தொடங்கி விடிய விடிய நடந்த பயங்கர வேட்டையில் இன்று காலை 3 தீவிரவாதிகளையும் ராணுவம் சுட்டுக் கொன்றது.
இந்த மோதலில் ராணுவத் தரப்பி்ல ஒரு ஜவான் காயமடைந்தார்.
இதுகுரித்து வடக்கு காஷ்மீர் டிஐஜி கரீப் தாஸ் கூறுகையில், 3 தீவிரவாதிகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் யாரேனும் கொல்லப்பட்டுள்ளனரா என்று தெரியவில்லை. தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. இன்று காலையில் இந்த என்கவுண்டர் முடிவுக்கு வந்தது என்றார்.
கொல்லப்பட்ட 3 பேரும் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் கரீப் தாஸ் தெரிவித்தார்.
Comments
English summary
Three militants have been killed and an Army jawan was wounded in an encounter between the militants and the security forces in North Kashmir’s Handwara district. Police said that the encounter, which broke out on Saturday evening in Zachaldara village in Handwara ended on Sunday morning.
Story first published: Sunday, August 23, 2015, 17:42 [IST]