காஷ்மீரில் விடிய விடிய நடந்த மோதலில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
Subscribe to Oneindia Tamil
காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் ஹந்த்வாரா பகுதியில் நடந்த மோதலில் 3 தீவிரவாதிகளை ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர்.
ஜசல்தரா கிராமத்தில் நேற்று மாலை தொடங்கி விடிய விடிய நடந்த பயங்கர வேட்டையில் இன்று காலை 3 தீவிரவாதிகளையும் ராணுவம் சுட்டுக் கொன்றது.
இந்த மோதலில் ராணுவத் தரப்பி்ல ஒரு ஜவான் காயமடைந்தார்.

இதுகுரித்து வடக்கு காஷ்மீர் டிஐஜி கரீப் தாஸ் கூறுகையில், 3 தீவிரவாதிகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் யாரேனும் கொல்லப்பட்டுள்ளனரா என்று தெரியவில்லை. தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. இன்று காலையில் இந்த என்கவுண்டர் முடிவுக்கு வந்தது என்றார்.
கொல்லப்பட்ட 3 பேரும் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் கரீப் தாஸ் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications