சிபிஎஸ்இ தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரத்தில் பயிற்சி மைய உரிமையாளர் உள்பட மேலும் 3 பேர் கைது
சிபிஎஸ்இ வினாத்தாள் லீக்கான விவகாரத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டெல்லி: சி.பி.எஸ்.இ. தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரத்தில் பயிற்சி மைய உரிமையாளர் உள்பட மேலும் 3 பேரை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
சி.பி.எஸ்.இ. 10ஆம் வகுப்புக்கான கணித பாட வினாத்தாளும், 12ஆம் வகுப்புக்கான பொருளியல் பாட வினாத்தாளும், வாட்ஸ்-ஆப் மூலம் முன்கூட்டியே வெளியானதை அடுத்து அந்த இரு தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன.

இந்நிலையில், ஜார்கண்ட் மாநிலம் சத்ரா என்ற இடத்தில் செயல்பட்டு வரும் ஸ்டடி விஷன் என்ற பயிற்சி மையத்தின் உரிமையாளர் உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
அத்துன் வினாத்தாளை வாட்ஸ்ஆப் குழு மூலம் பகிர்ந்ததாக, 10ஆம் வகுப்பு மாணவர்கள் 9 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதனிடையே, வினாத்தாள் வெளியான விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்ட டெல்லி குற்றப்பிரிவு போலீசார், 60க்கும் மேற்பட்ட நபர்களை பிடித்து விசாரித்து வந்தனர்.
அவர்களில் 2 ஆசிரியர்களையும், தனியார் பயிற்சி மைய உரிமையாளர் ஒருவரையும் கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
தேர்வு நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு கிடைத்த வினாத்தாளை செல்போனில் படம் பிடித்த ஆசிரியர்கள், அதை வாட்ஸ் ஆப் மூலம் தனியார் பயிற்சி மைய உரிமையாளருக்கு அனுப்பியதும் அந்த பயிற்சி மைய உரிமையாளர் தங்களிடம் படிக்கும் மாணவர்களுக்கு வினாத்தாளை அனுப்பிவைத்ததும், போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
எனினும், இந்த வினாத்தாள் எவ்வாறு வெளியானது என்பது குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications