பன்றிக்காய்ச்சல் பலி 1319ஆக உயர்வு; கோவையில் ஒரே குடும்பத்தில் 5 பேர் சீரியஸ்
டெல்லி: பன்றிக்காய்ச்சல் நோய்க்கு நாடு முழுவதும் மேலும் 30 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 319 ஆக அதிகரித்துள்ளது.
கோவை மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பன்றிக்காய்ச்சல் நோய்க்கு பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குளிர்காலத்தில் தொடங்கிய பன்றிக்காய்ச்சல் கோடை காலம் வந்தும் தீவிரம் குறையாமல் உள்ளது. கொத்துக் கொத்தாக மடிந்து வருவதால் மக்களிடையே பீதி அதிகரித்துள்ளது.

24,661 பேர் பாதிப்பு
மத்திய சுகாதார துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை வரை எடுத்துள்ள புள்ளி விவரங்களின் படி, பன்றிக்காய்ச்சல் நோய்க்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24 ஆயிரத்து 661 ஆக உயர்ந்துள்ளது.

1319 பேர் பலி
பன்றிக்காய்ச்சல் நோய்க்கு அதிகபட்சமாக குஜராத் மாநிலத்தில் 324 பேரும், ராஜஸ்தான் மாநிலத்தில் 305 பேரும் உயிரிழந்துள்ளனர். நாடுமுழுவதும் 1319 பேர் உயிரிழந்துள்ளனர்.

கோவையில் 6 பேர்
கோவை மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் முதல் துவங்கிய பன்றிக்காய்ச்சல் பாதிப்பு, பிப்ரவரியில் அதிகரித்தது. கடந்த, 10 நாட்களில் கோவை, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த ஆறு பேர் பன்றிக்காய்ச்சலுக்கு பலியாகியுள்ளனர்.

ஒரே குடும்பத்தில்
இந்த நிலையில் கோவை சேரன்மாநகரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவர்கள் அனைவரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

சிறப்பு வார்டு
கோவை மாவட்டத்தில் மட்டும் 500க்கும் மேற்பட்டோர், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.பன்றிக்காய்ச்சலில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், கோவை அரசு மருத்துவமனையில், அதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு வார்டு, மேம்படுத்தப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications