ஒன்வெப் நிறுவனத்தின் 36 செயற்கை கோள்கள்..வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்திய இஸ்ரோ..ஏன் முக்கியம்?
ஸ்ரீஹரிகோட்டா: ஒன்வெப் நிறுவனத்தின் 36 செயற்கைகோள்கள் இஸ்ரோவின் ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. 450 கி.மீட்டர் தொலைவில் 87.4 டிகிரியில் புவி சுற்று வட்டப் பாதையில் செயற்கைகோள்கள் நிலை நிறுத்தப்பட்டன. இந்த செயற்கைகோள்கள் மற்றும் ஒன்வெப் நிறுவனம் குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ விண்வெளித்துறையில் பல்வேறு வியத்தகு சாதனைகளை புரிந்து வருகிறது.
பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி, எஸ்எஸ்எல்வி ரக ராக்கெட்டுகள் மூலம் செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது.

விண்ணில் ஏவப்பட்டது
அதிக எடையை தூக்கி செல்லும் ஜி.எஸ்.எல்.வி. ரகத்தில் 'எல்.வி.எம்3-எம்3' என்ற ராக்கெட்டை இஸ்ரோ வடிவமைத்து உள்ளது. இந்த ராக்கெட்டில் இங்கிலாந்துக்கு சொந்தமான ஒன்வெப் இந்தியா-2க்கான 36 செயற்கைகோள்கள் பொருத்தப்பட்டு உள்ளன. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இன்று காலை இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.

36 செயற்கை கோள்கள்
ஒன்வெப் நிறுவனத்தின் 72 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த இஸ்ரோவின் என்எஸ்ஐஎல் நிறுவனம் கடந்த ஆண்டு ஒப்பந்தம் மேற்கொண்டு இருந்தது. வணிக நோக்கிலான இந்த ஒப்பந்தத்தின் கீழ் முதல்கட்டமாக, ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் 36 செயற்கைக்கோள்கள் கடந்த ஆண்டு அக்டோபர் 23-ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட நிலையில் இரண்டாவது கட்டமாக இன்று 36 செயற்கை கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டன.

இது 18-வது முறை
தகவல் தொடர்பு செயற்கைகோள்கள் புவிசார் சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்டது. விண்ணில் ஏவப்பட்டுள்ள 36 செயற்கைக்கோள்களின் 5,805 கிலோ எடை கொண்டதாகும். பூமியில் இருந்து சுமார் 450 கி.மீ. தொலைவில் இந்த செயற்கை கோள்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. ஒன்வெப் நிறுவனம் செயற்கைகோள்களை விண்ணில் ஏவுவது இது 18-வது முறை என்று அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு ஆண்டு இறுதிக்குள்
நடப்பு ஆண்டில் மட்டும் மூன்றாவது முறையாக இந்த நிறுவனம் செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தியுள்ளது. இஸ்ரோவை பொறுத்தவரை நடப்பு ஆண்டில் இரண்டாவது முறையாக செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தியுள்ளது. முன்னதாக SSLV-D2/EOS07 திட்டத்தை கடந்த மாதம் இஸ்ரரோ நிறைவேற்றியது. ஒன்வெப் நிறுவனத்தை பொறுத்தவரை நடப்பு ஆண்டில் 616 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளது. சர்வதேச சேவைக்கு தேவையான அளவு செயற்கை கோள்கைகளை நடப்பு ஆண்டு இறுதிக்குள் விண்ணில் செலுத்தி விடுவோம் என்று தெரிவித்துள்ளது.

முதல் முறையாக நிறைவு செய்திருக்கிறது
36 செயற்கைகோள்கள் நிலை நிறுத்தப்படதன் மூலம், பூமியின் தாழ்வான வட்டப்பாதையில் தங்கள் நிறுவனம் செயற்கை கோள்களை விண்ணில் நிலைநிறுத்துவதை சர்வதேச அளவில் முதல் முறையாக நிறைவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ள ஒன்வெப் நிறுவனம் இந்த திட்டம் மிக முக்கியமான மைல் கற்களில் ஒன்றாக இருக்கும் தெரிவித்துள்ளது. ஒன்வெப் நிறுவனத்தை பொறுத்தவரை சர்வதேச தொலைத்தொடர்பு நெட்வொர்க் நிறுவனமாகும். அரசு மற்றும் பிசினஸ் அமைப்புகளுக்கு கனெக்டிவிட்டி அளிக்கும் பணியை இது செய்து வருகிறது. இந்த ஒன்வெப் குழுமத்தில் பாரதி என்டர்பிரைசஸ் நிறுவனம் மேஜர் முதலீட்டாளராக உள்ளது.












Click it and Unblock the Notifications