ஆற்றை கடந்து ராணுவ பயிற்சி..பாய்ந்தோடி வந்த வெள்ளத்தில் சிக்கிய T 72 பீரங்கி.. வீரமரணமடைந்த வீரர்கள்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர்கள் பீரங்கி பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, அவர்கள் பீரங்கியுடன் ஆற்று வெள்ளத்தில் சிக்கியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் பகுதி சர்வதேச நாடுகளுடன் தனது எல்லையை பகிர்ந்திருக்கிறது. எனவே இந்த பகுதி பதற்றம் மிக்க பகுதியாகவே இருந்து வருகிறது.

ராணுவத்தின் நடவடிக்கைகள் காரணமாக சமீபத்தில் இந்த பதற்றம் தணிந்திருக்கிறது. ராணுவ வீரர்கள் இந்த பகுதியில் தொடர் பயிற்சியை மேற்கொண்டிருக்கின்றனர். இப்படி நேற்று பீரங்கி பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது விபத்து நடந்திருக்கிறது.
ஜம்மு காஷ்மீரில் தௌலத் பேக் ஓல்டி பகுதியில் இன்று அதிகாலை 1 மணியளவில் பீரங்கி ஒன்று ஆற்றை கடக்க முயன்றிருக்கிறது. இந்த பீரங்கியில் 5 ராணுவ வீரர்கள் இருந்திருக்கின்றனர். ஆற்றை கடக்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது.
இதனால் பீரங்கி முழுவதுமாக மூழ்கியுள்ளது. இந்த விபத்தில் 5 வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும், அவர்களின் உடல்களை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் ராணுவம் தெரிவித்திருக்கிறது. வீரர்கள் T-72 ரக பீரங்கியில் பயிற்சி செய்திருக்கின்றனர். சோவியத் யூனியன் காலத்தில் இந்த பீரங்கிகள் உற்பத்தி செய்யப்பட்டன. ரஷ்யாவிடம் இந்தியா ஏற்கெனவே ஆயுத டீலிங் கொண்டிருந்ததால் இந்த பீரங்கிகள் ராணுவத்திற்காக வாங்கப்பட்டிருந்தன.
இந்த பீரங்கிகள் ஒவ்வொன்றும் சுமார் ரூ.4.16 கோடி மதிப்புடையதாகும். இதில் மூன்று பேர் தாராளமாக பயணிக்கலாம். ஆனால், அவசியம் எனில் 5 பேர் வரைக்கூட பயணிக்க முடியும். ஏறத்தாழ 41 ஆயிரம் கி.கி எடை கொண்ட இந்த வகை பீரங்கிகள், 60-75 கி.மீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டவையாகும். ஆற்றில் செல்லும் திறன் கொண்டவையாக இவை அறியப்பட்டாலும், தண்ணீரில் செல்லும்போது பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ளும் பீரங்கிகளாக இது இருக்கிறது.
இதனை தயாரித்த ரஷ்யாவே இந்த பிரச்னையை ஒப்புக்கொண்டது. இது நீருக்குள் செல்லும்போது சில நேரங்களில் ஸ்டக்காகி நின்றுவிடுகிறது என ரஷ்ய ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இப்படி இருக்கையில் ஜம்மு காஷ்மீரில் தற்போது நடந்த விபத்து குறித்து ராணுவம் உயர்மட்ட விசாரணையை தொடங்கியுள்ளது.
-
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்!












Click it and Unblock the Notifications