மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் காரை பின்தொடர்ந்ததாக 4 பேர் கைது
டெல்லியில் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியின் காரை பின்தொடர்ந்ததாக 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
Subscribe to Oneindia Tamil
டெல்லி: டெல்லியில் காரில் சென்று கொண்டிருந்த மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியை பின்தொடர்ந்ததாக 4 இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.
டெல்லியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி நேற்று மாலை காரில் சென்றபோது பின்னால் ஒரு கார் பின்தொடர்ந்து வந்தது. அவருடைய பாதுகாப்பு வாகனமும் உடன் வந்து உள்ளது.

உடனடியாக ஸ்மிருதி இரானி டெல்லி போலீஸுக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்துக்கு விரைந்த டெல்லி போலீஸார் அமெரிக்க தூதரக பகுதியில் இரானியின் காரை பின்தொடர்ந்த காரை மடக்கினர்.
அதிலிருந்த டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் 4 பேரும் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications