வியாபம் ஊழல்... 40 பேர் கொண்ட சிபிஐ குழு விசாரணையைத் தொடங்கியது
டெல்லி: நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள வியாபம் ஊழல் தொடர்பாக 40 பேர் கொண்ட சிபிஐ குழு இன்று விசாரணையைத் தொடங்கியுள்ளது.
மத்திய பிரதேசத்தில் தொழில்முறை தேர்வு வாரியமான வியாபம் மூலம் அரசு பணிகளுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இத்தேர்வுகளில் சிலர், லஞ்சம் கொடுத்து எளிதாக வேலைவாய்ப்பை பெற்று சென்றதாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக மத்திய பிரதேச சிறப்பு விசாரணைக்குழு விசாரணை நடத்தி அரசியல் பிரமுகர்கள், முக்கிய புள்ளிகள் என பலரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. இந்நிலையில் வியாபம் ஊழல் வழக்கில் தொடர்புடையவர்களாக கருதப்படும் 49 பேர் அடுத்தடுத்து மர்மமான முறையில் இறந்தனர். மேலும் வியாபம் முறைகேட்டில் மத்திய பிரதேச முதல்வரான பாரதிய ஜனதாவின் சிவராஜ் சிங் சவுகானுக்கும் தொடர்பிருப்பதாக குற்றச்சாட்டு வலுத்து வருகிறது.
அதனைத் தொடர்ந்து வியாபம் முறைறேடு வழக்குகளை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. தனி குழுவை அமைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் இந்த உத்தரவில் உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இதனை ஏற்று வியாபம் ஊழலை விசாரிப்பதற்காக இணை இயக்குநர் நிலையில் உள்ள அதிகாரிகளின் கீழ் 40 பேர் கொண்ட தனி குழு ஒன்றை சிபிஐ அமைத்துள்ளது.
இந்தக் குழு இன்று போபால் சென்று தனது விசாரணையைத் தொடங்கியுள்ளது. வருகிற 24-ம் தேதிக்குள் இந்தக் குழு தனது விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கும் எனக் கூறப்படுகிறது.
சிறிய தவறுகள் கூட நடைபெற்று விடக் கூடாது என்பதற்காக இந்த சிறப்பு படையில் இடம்பெற்றுள்ள 40 பேர் மற்றும் அவர்களுக்கு தலைமை வகிப்பது யார் என்பது குறித்த விவரங்களை சிபிஐ மிகவும் ரகசியமாக வைத்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications