டெல்லியில் 7 வயது மகளை பலமுறை பலாத்காரம் செய்த காமக்கொடூர தந்தை
டெல்லி: டெல்லியில் பெற்ற மகளையே பாலியல் பலாத்காரம் செய்த தந்தை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வடமேற்கு டெல்லியில் உள்ள பால்ஸ்வா டெய்ரி பகுதியைச் சேர்ந்தவர் விக்ரம்(பெயர் மாற்றப்பட்டுள்ளது). 40 வயதான அவர் கூலித் தொழில் செய்து வருகிறார். கடந்த வியாழக்கிழமை இரவு அவரது 7 வயது மகள் தனக்கு வயிறு வலிப்பதாக தனது தாயிடம் தெரிவித்துள்ளார்.

தாய் சிறுமியை பரிசோதனை செய்தபோது அவரது பிறப்புறுப்பில் காயம் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் தனது மகளை மருத்துவரிடம் அழைத்துச் சென்றார். சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் பல முறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அந்த பெண் தனது மகளிடம் நடந்ததை கூறுமாறு கேட்டார். அப்போது தான் சிறுமி தன்னை தனது தந்தையே பலமுறை பலாத்காரம் செய்த விபரத்தை தெரிவித்தார். உடனே அந்த பெண் தனது கணவர் மீது போலீசில் புகார் அளித்தார்.
அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விக்ரமை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications