கேரளா காசர்கோடு கல்யாணத்துக்கு போன 43 பேருக்கு கொரோனா இப்படித்தான் பரவிச்சாம்
காசர்கோடு மாவட்டத்தில் நடைபெற்ற திருமணத்தில் பங்கேற்ற 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
காசர்கோடு: கல்யாணம் பண்ணியும் பிரம்மசாரி என்பார்கள். கல்யாணத்திற்குப் போன இடத்தில் கொரோனா பரவினால் எப்படி இருக்கும் அதுவும் பெண், மாப்பிள்ளைக்கும் கொரோனா பரவினால் 10 நாட்களுக்கு மேல் சிகிச்சைக்காக பிரித்து வைத்துவிடுவார்கள். இப்படி ஒரு சோகமான சம்பவம் கேரளா மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவி வருவதால் திருமணம், பண்டிகைகளில் 20க்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்க தடை உள்ளது என்றாலும் எத்தனை பேர் அதை மதித்து பின்பற்றுகிறார்கள் என்று தெரியவில்லை. சொந்தக்காரர்கள் வீட்டு விழாக்களுக்கு போய்க்கொண்டுதான் இருக்கிறார்கள்.

அப்படித்தான் கேரளாவின் காசர்கோடு மாவட்டம் செங்கலாவை அடுத்த பிலங்கட்டா கிராமத்தில் கடந்த 17ஆம் தேதி ஒரு திருமணம் நடைபெற்றது. இந்த கல்யாணத்தில் அரசின் உத்தரவை மீறி 125 பேர் பங்கேற்றனர். அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இவர்களில் 43 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் என்று தெரியவந்தது. மணப்பெண்ணின் அப்பாவிற்குத்தான் முதலில் கொரோனா உறுதியானது.
அவரைத் தொடர்ந்து கல்யாணப் பெண், மாப்பிள்ளை மற்றும் சொந்தக்காரர்கள் 43 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அனைவருமே சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மணப்பெண்ணின் தந்தை மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மணமகன் சில மாதங்களுக்கு முன்புதான் துபாயில் இருந்து கேரளா வந்திருக்கிறார் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications