சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்டுகள் அட்டூழியம்.. 22 பாதுகாப்புப் படை வீரர்கள் வீர மரணம்
ராய்ப்பூர்: சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் உள்ள பஸ்தார் காடுகளில் மாவோயிஸ்டுகளுடன் துப்பாக்கி சண்டையில் இதுவரை 22 பாதுகாப்பு படை வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளளனர்
கடந்த 10 நாட்களில் சத்தீஸ்கரில பாதுகாப்புப் படையினர் மீதான இரண்டாவது பெரிய தாக்குதல் ஆகும்.
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளை ஒழிப்பதற்காக, கோப்ரா, எஸ்.டி.எஃப், டி.ஆர்.ஜி மற்றும் சிஆர்பிஎஃப் ஆகிய படைகளைச் சேர்ந்த 400 க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படை வீரர்கள் நக்சல் தடுப்பு வேட்டைக்காக ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

துப்பாக்கிச்சூடு
சனிக்கிழமை அன்று சுக்மா மற்றும் பிஜாப்பூர் எல்லையில் உள்ள டேரன் பிராந்தியத்தின் காடுகளில் பதுங்கி இருந்த மாவோயிஸ்டுகளை பிடிக்க துணை ராணுவ வீரர்கள் முயன்றனர். அப்போது மாவோயிஸ்டுகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

5 பேர் வீர மரணம்
பதிலுக்கு துணை ராணுவ வீரர்களும் சுட்டனர். இந்த மோதலில் துணை ராணுவ வீரர்கள் 5 பேர் வீரமரணம் அடைந்தனர். பலர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே நேற்று சண்டையில் ஈடுபட்ட போது காணாமல் போன பாதுகாப்பு படை வீரர்கள் 14 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இதுவரை இந்த மோதலில் 22 பாதுகாப்பு படை வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர் என்று சிஆர்பிஎப் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பலத்த சேதம்
இந்த சண்டையில் மாவோயிஸ்டுகள் தரப்பிலும் பலத்த உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது, தொடர்ந்து கடும் சண்டை நடைபெற்று வருவதால் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் உயரக்கூடும் என்று ஒரு மூத்த போலீஸ் அதிகாரி தெரிவித்தார். இதனிடையே இந்த மோதல் பஸ்தார் காடுகளில் மிகப்பெரிய மோதல்களில் ஒன்றாக மாறக்கூடும் என்று சத்தீஸ்கர் உள்துறை அமைச்சர் தமரத்வாஜ் சாஹு கூறியுள்ளார்.

அதிரடி திட்டம்
காவல்துறை அதிகாரி கூறும் போது "ஏராளமான மாவோயிஸ்டுகள் மூத்த தளபதிகளுடன் காட்டில் ஒரு சந்திப்பை நடத்தி வருவதாக தகவல் கிடைத்தது. இந்த அடிப்படையில் திட்டமிடப்பட்டது. அதிக எண்ணிக்கையில் கூடியிருந்த மாவோயிஸ்டுகளை சுற்றி வளைக்க வீரர்கள் திட்டமிட்டனர். இதன்படி சனிக்கிழமை நள்ளிரவு 12 மணியளவில், சுக்மா-பிஜாப்பூர் எல்லையில் உள்ள ஜாகர்குண்டாவில் காட்டுக்குள் பாதுகாப்பு குழுவினர் சென்றனர். துப்பாக்கிச் சண்டை கடுமையாக நடந்தது என்றார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications