For Daily Alerts
Just In
ஒடிசாவில் மாவோயிஸ்ட்கள் கண்ணிவெடி தாக்குதல்: பொதுமக்கள் ஒருவர் உள்பட 5 போலீசார் பலி
ஒடிசா: ஆந்திரா - ஒடிசா எல்லையில் மாவோயிஸ்டுகளின் கண்ணிவெடித் தாக்குதலில் 5 போலீசார் பலியாகினர். மேலும் பொதுமக்கள் ஒருவரும் இந்த தாக்குதலில் பலியாகியுள்ளார்.
ஆந்திரா - ஒடிசா மாநில எல்லையில் உள்ள கோரபுட் மாவட்டம் சுங்கி அருகே போலீசார் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது மாவோயிஸ்ட்கள் வைத்திருந்த கண்ணி வெடியில் அவர்கள் சென்ற வாகனம் சிக்கியது. இதில் 5 போலீசார் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் அப்பகுதியில் சென்றுகொண்டிருந்த மேலும் ஒருவரும் உயிரிழந்தார்.
இதையடுத்து அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாவோயிஸ்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
Comments
English summary
Preliminary report suggested that 10 policemen were on their way to Bhubaneswar for driver training the landmine blast took place heavily damaging their vehicle. Odisha Chief Minister condoled the death of the policemen while terming the attack an act of cowardice.
Story first published: Wednesday, February 1, 2017, 21:26 [IST]